இவ்வுலகில் வாழும் மானுடர் யாவரும் வர்க்கம், மதம், மொழி, நாடு, தீண்டாமை போன்ற பல்வகைப் பிரிவுகளுக்குள் சிக்கி வாடி,வதங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பின் நோக்கமறியாது ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் போர்களினால் இப்பூவுலகை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பாதுகாத்துப் பேணப்பட வேண்டிய எமது அன்னை பூமியை தம் தீர்க்கதரிசனமற்ற செயல்களினால் சீரழித்துக்கொண்டிருக்கின்றார்கள். அறியாமை இருள் சூழந்து ஆட்டம் போட்டபடியிருக்கின்றார்கள். இவ்விருள் நீக்கி ஒளி பரப்பும் நாளாக இத் தீபாவளித் திருநாள் அமையட்டும்! இவ்வினிய நாளில் உங்கள்: அனைவர்தம் வாழ்வும் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கட்டும்! வாழ்த்துகின்றோம்.