கவிதை: திருவிளையாடல்!

காதணியைக் கழற்றி வீசி விட்டாய் அன்று
வேதனையைச் சுழற்றித் துரத்தி விட்டாய்
சாதனை யாதும் அறிந்திலனே.
பாதம் பணிந்தேன் ஆட்கொள்ளம்மா

நூதனமான பரிசம்மா உன்
திருவிளையாடல் புரிந்தவர் யார்
என்னையும் ஒரு பொருட்டென்று
இன்று காதணி இரண்டும் தந்து விட்டாய்