'தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான்  'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்திருந்தேன்.  அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி.

முருகபூபதி -

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தமிழ்க்கவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நீங்கள் நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். அதற்காக உங்களைப்பாராட்டுகின்றேன். தமிழ்க்கவியின் கட்டுரைக்காக எதிர்வினையாற்றியவர்கள் இவ்வளவுதூரம் அமர்க்களம் செய்திருக்கத்தேவையில்லை. மலையகத்தமிழர்களின் அவலம் முடிவுறாதது. செ. கதிர்காமநாதனின்" வெறும் சோற்றுக்கே வந்தது " (அஞ்சலியில் வெளியான கதை) டானியலின் சில படைப்புகள். இவ்வாறு நீங்கள் சொல்வதுபோன்று பல தகவல்கள் ஆதாரம். எனினும் நீங்கள் உரியநேரத்தில் முன்வந்து சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகின்றேன். நன்றி.

அன்புடன்

முருகபூபதி