அம்பர்தோ எகோஅம்பர்தோ எகோஅம்பர்தோ எகோ

அம்பர்தோ எகோ பல் துறைகளில் தன் ஆளுமையினைப்பதித்த முக்கியமானதோர் ஆளுமை. இலக்கிய விமர்சனம், ஊடகப் பண்பாடு, குறியியல், மானுடவியல், படைப்பு இலக்கியம் மற்றும் மத்தியகாலத்து அழகியல் பற்றிய ஆய்வுகள் என இவரது பங்களிப்பு பரந்தது; முக்கியமானது; தவிர்க்க முடியாதது.

தமிழில் இவரைப்பற்றிய விரிவான நூல்கள் அல்லது இவரது நூல்கள் அதிகம் வந்ததாகத்தெரியவில்லை. ரஃபேலின் (வின்சென்ட் பால்) 'அம்பர்தோ எகோ :சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு' என்றொரு நூல் , அகம்புறம் பதிப்பகத்தின் மூலம் 2010இல் வெளிவந்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் மேலும் பல நூல்கள் வந்திருக்கக்கூடும்.

இவரது இழப்பு மிகப்பெரியதோர் இழப்பு என்றால் அது மிகையான வார்த்தைகளல்ல. ஆழ்ந்த அஞ்சலிகள்.