நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'மல்லிகை' இதழுக்கு 2016ஆம் ஆண்டு ஐம்பதாவதாண்டு பூர்த்தியாகிவிட்டது. அது தொடர்பாக .மல்லிகை' சஞ்சிகையில் பங்களித்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றினை தயாரிக்கும்பொருட்டு அப்படைப்பு பற்றிய விபரங்களை (படைப்பின் தலைப்பு, ஆசிரியர் பெயர், வெளியாகிய இதழ் போன்ற) 'மல்லிகை' சஞ்சிகை நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இது பற்றிய அறிவித்தலொன்றினையும் 'மல்லிகை' சஞ்சிகையினர் வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிவித்தலை நண்பர் எழுத்தாளர் மேமன்கவி அனுப்பி வைத்திருந்தார். அதனை இங்கு 'பதிவுகள்'வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.

நண்பர்களே! உங்களது படைப்புகள் 'மல்லிகை' சஞ்சிகையில் வெளியாகியிருந்தா;ல் அது பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள்.