உயில் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர்  நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார்

'உயில் மற்றும் சித்தம் அழகியார்' ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர்  நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார். கடும்மழையின் காரணமாக நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்திருந்த பல நண்பர்கள் வரமுடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட பணம், விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரின் கல்வித்தேவைக்கு வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களும் பின்னர் பதிவேற்றப்படும்.

நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் அறிந்துகொள்ளலாம்:

https://www.facebook.com/skuneswaran/media_set?set=a.1110449548977752.1073741906.100000381515714&type=3&pnref=story

படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.