தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா0

1. மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!

வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!

பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!

ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!  
 

02. ஒட்டடை நினைவுகள்!

இன்னதென்ற
காரணம் தெரியாமலேயே
வலியெடுக்கிறது
எனது இடது புறத்தில்!

உலகத்திலுள்ள
அனைத்து கவலைகளும்
என்னில் தேங்கியிருக்கிற
மெய் நிலை!

என்னென்வோ
நினைத்துப் பார்த்த
பொழுதிலும்
எதிலும் சிக்காமல்
கைநழுவிச் செல்லும்
அந்த
ஒட்டடை நினைவுகள்!

குளவி கொட்டிப்போன
வேதனையின் சாயலிலும்
பாலைவன மணலின் கொதிப்பிலும்
துயர்களை தருவிக்கிறது
இருதயம்!  

 
03.  நீ வாழ்வது மேல்!
 
கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!

நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!

கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?

நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 
www.storyrizna.blogspot.com
www.poemrizna.blogspot.com
www.vimarsanamrizna.blogspot.com
http://udaru.blogdrive.com/archive/837.html
http://www.vaarppu.com/view/1920/
http://www.muthukamalam.com/muthukamalam_padaipalarkal%20rishna.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
http://www.youtube.com/watch?v=8VI2jkJ62uQ
http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q
 

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R