- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று...

நாம் அவளைத் தோண்டினோம் - வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் - தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் - நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை - கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை - அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்...

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்...
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் - அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

பொறுமையின் சிகரமாய் அவள் இருந்தாள்!
பூகம்பமாய் குலுங்கி அழக் காரணம் நாமே!
ஏர்பிடித்து உழுதவுடன் ஊர்முழுதும் சோறிட்டு
உள்ளம் நெகிழ்ந்தவள் - இன்று பாளம் பாளமாய்
வெடித்துச் சிதறும் பரிதாபம் நம்மால்தான்...

இனியாவது அவளை வளப்படுத்தாவிட்டாலும் வேண்டாம்
நண்பா! இரணப்படுத்தாமலாவது இருப்போம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R