- முனைவர் இரா. இராமகுமார் -

"காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா....
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா....."

"எவரெஸ்ட்டில் ஏறி
என்முகம் பூரிக்கிறது.
இமயமலையை
விலைக்கு வாங்கி
இதயத்தில் பூட்டுகிறேன்.
இராமேஸ்வர பாலமும்
வழிவிடுகிறது
புதிய இராமாயணம்
படைக்கிறேன்.
விண்ணில் பறக்கும் போது
சூரியன் என்னை
முத்தமிட்டது.
ஆஸ்கார் விருதும்
என் தலைமையில்
அடடா....!
என்ன அற்புதம்
பசியினில்
இப்படியே எத்தனையோ
புலம்பல்
விட்டத்தைப் பார்த்தபடியே.....!
பசியினில் கூட
பயங்கரம்.
பாமரனுக்கு வறுமைதானா
நிரந்தரம்."

"நிஜங்கள் கனவுகளாக
கனவுகள் நிழல்களாக
சொல்லும் செயலும்
நேர்மையின்றி செல்ல
வெற்றி மட்டும்
தடம் மாறுவதேன்.
படிப்பு என்பது போதனையா!
படித்ததனால் வருவது
சோதனையா!
மயக்கமும் கலக்கமும்
மாணவர் பருவத்தில் இல்லை.
தயக்கமும் குழப்பமும்
வேலை கிடைக்கும் வரை
தொல்லை.
டாஸ்மார்க்கை விட
பாஸ்மார்க் வாங்கியவரின்
கூட்டம் அலைமோதுகிறது
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்......
எத்தனைமுறை
புதுப்பித்தும்
அத்தனைமுறையும்
ஒரே பதில்
'இங்கு வேலை காலியில்லை '
காலாவதியானது காலம்.
இது யார் போட்ட கோலம்."

"ஒருவேளை உணவுக்கு
ஒரு வேலை இல்லை.
படித்த பட்டம்
ஒவ்வொரு வாசலாய்
ஏறுவது தொல்லை.
ஏட்டில் எழுதியும்
"மை "
உலரவில்லை.
வறுமையை அழிக்க
அழிப்பான்
இன்னுமா கிடைக்கவில்லை.
பட்டங்கள் பயன்படுமா!
திட்டங்கள் நடைமுறையாகுமா!
திண்டாட்டம் குறைந்தால்
கொண்டாட்டம் கூடும்.
மன்றாடுகிறது
தரமிகு இளைஞர் கூட்டம்
வேலையில்லா பட்டதாரியாய்......."

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R