கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

பிள்ளைகள் தேம்பியழ,
கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சின்னத்திரையெங்கும்.....

அன்பின் பெயரால்
முகநூல்வெளியெங்கும் சொல்லாயுதங்களோடு
வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.....
நம்மை நாம் நாலாந்தர எதிரிகளாய் பாவிக்க
நம்மை நமக்கே நபும்சக எத்தர்களாய்க் காண்பித்து
கண்சிவக்க அத்தனை ஆங்காரமாய்
கத்திக்கொண்டிருக்கிறார்கள்
நமது குரல்களாய் தம்மைத்தாமே
பிரகடனம் செய்துகொள்பவர்கள்.
மறுக்கும் குரல்வளையை
அறுக்கத் துணிந்தவர்கள்.

மறவாமல் தற்காப்புக்கவசமணிந்திருக்கும்
அவர்களுக்கு
தெருவெங்கும் சகமனிதர்கள்
தீக்காயங்களோடு சிதறியோடுவதைப் பற்றி
எந்தவொரு கவலையுமில்லை.
இற்றுவிழுவோர் எண்ணிக்கை
எத்தனைக்கெத்தனை அதிகரிக்குமோ
அத்தனைக்கத்தனை அதிகமாய்
வந்துசேரும் விளம்பரங்களும்
வெளிநாட்டுப்பயணங்களும்.

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R