கவிதை: அந்தி விடிவெள்ளீ!

அதிகாலை விடிவெள்ளிப்பெண்ணே
ஒருபோதில்
அதிகாலைகளுக்கெல்லாம் எழிலூட்டினாய்.
அதிகாலைகளில் நான் விழித்தெழுந்ததெல்லாம்
அடியே! கிழக்கினில்
ஆடி அசைந்து வரும்
உன் அழகைப்பருகுவதற்காகத்தானென்பதை
நீ அறியாய்! அந்தத் தைரியத்தில் நானுனை
அணு அணுவாக இரசித்ததுண்டு; தெரியுமா?
அதிகாலை விடிவுப்பெண்ணே!
அதிகாலைகளினெழிலேற்றிய
விடியற் பெண்ணே!
இடையிலெங்கே சென்றாய்?
தனிமையிலெனைத் தவிக்க விட்டு நீ
தலைமறைவானாய்! ஏன்?

பகலவன் மறைத்த பகற்பொழுதுகளில்
நீ மறைந்திருந்தாய் ஆயினும்
நானுனை மறக்க வில்லையடி.
விடிவினை வழிமொழிந்த
என் பிரிய
விடிவெள்ளிப்பெண்ணே!
தனிமைகளில் கூட உன் நினைவால்
நான் இனிமை கண்டதுண்டு.
தெரியுமா? அறிவாயா?
மறைந்த  நீ மீண்டும் அந்தியில் உன்
முகம் காட்டினாய்.முறுவலித்தாய்.
காலைகளுக்கு எழிலூட்டிய விடிவுப்பெண்
நீ - இன்று
மாலைகளுக்கும் எழிலூட்டுகின்றாய்.
யார் சொன்னது உன்னை
விடிவினை மட்டும் வழிமொழியும்
விடிவுப்பெண்ணென்று.
நான் சொல்லுவேன் நீ
அந்திக்கும் அழகூட்டும்
அழகுப்பெண்ணென்று
அந்தியையும் மயங்க வைத்திடும்
அந்தியின் விடிவெள்ளியென்று.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R