கவிதை படிப்போமா?

அவ்வளவு தூய்மை
வழிகிறது குழந்தைகள் கண்ணில்
தடுமாறுகிறார்கள் தந்தைகள்

எப்படி இந்த மாசுபட்ட உலகை
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது

அவர்களின் நுரையீரல்
பிரம்ம முகூர்த்தத்து ஓசோனால்
நிரம்பி வழிய வேண்டும்

காற்றின் நறுமணம் கற்பழிக்கப்பட்டதை
அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படிச் சொல்வது

அவர்களின் கைகளில்
வழிய வழிய பூக்கள் பூக்க வேண்டும்
ரத்தம் வழியும் துப்பாக்கிகள்
எதற்காக என்று அவர்கள் கேட்டால்
என்ன சொல்வது

காட்டில் பலா மணக்கும் வாசனை முகர்ந்தபடி
இலைகளின் பேச்சு வார்த்தையை
பறவைகளின் பாடல்களை
அவர்களின் செவிகள் விரும்பக்கூடும்
அணுகுண்டுகளின் வெடிப்புச் சோதனையில்
அவர்கள் செவிடாகி விட்டால்
என்ன செய்வது

பூஞ்சிறுமிகள் பூப்படையும் முன்பே வன்புணர்ந்து கொல்லப்பட்ட
கதைகளை சொல்லித்தான்
அவர்களை பத்திரமாக இருக்கும்படிச் சொல்ல வேண்டுமா

ஆட்டுக்குட்டிகளை
முத்தமிட்டுப் பேசுகிறார்கள்
நாய்க்குட்டிகளை
விரட்டி விளையாடுகிறார்கள்
மனிதர்களை மனிதர்கள் கொல்வதை
எப்படி அவர்களுக்கு சொல்வது

அவ்வளவு புதிதாக இருக்கும் அவர்களை
அத்தனைப் பழையதாக
நம்மைப் போல எப்படி மாற்றுவது.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R