- தம்பா (நோர்வே) -

"வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

"வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்."

"கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா"

" உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு."

"ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?"

"உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

வடக்கும் தெற்கும்
திசைவழி வேறு வேறு.
தேட்டம் உங்களின் கனவுலகம்,
தேடல் எனது நனவுலகம்.

உணவு முட்டி வயிறு பெருக்க
நெஞ்செரிக்க விருந்து
வேண்டிலர் பெருந்தகை.
போரில் தறித்து வீழ்ந்தவர்
வயிறு ஒட்டி உணவு வேண்டி
கண்ணெரிய பினி
வேண்டிலார்  பெரும்தொகை.

ஆயிரம் ஆயிரம் சாமானியர்களின்
சூனிய தளைகளை  
என் ஆடம்பர அகவையின்
வலைகள் உடைக்கட்டும்.
நெடுவாழ்வும் மகிழ்வேன்.

வாருங்கள் பெற்றவரே வாருங்கள்
பணம் பார்க்காத
பாசத்தையோ நேசத்தையோ
படியளக்கலாம் வாருங்கள்!"


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R