நூல்  : இறுதி மணித்தியாலம்.- மேமன்கவி -ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக''இறுதி மணித்தியாலம்'' எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன  கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.  மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.   அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

ஈழத்துச் சூழலைப் பொறுத்த வரை மேலும் சில பல பிரச்சினைகள் பற்றி அவை சார்ந்த அனுபவங்களையும் சிங்களக் கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது இத்தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது. 77 சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள். அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் பற்றியெலாம் கலைத்துவமாகவும் தாக்கபூர்வமாவும் சிங்கள நவீன கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என இத்தொகுப்பு கவிதைகள் மூலம் தெரிகிறது அத்தோடு பெண்ணியச் சார்ந்த குரலையும் அழகாகவும் ஆழமாகவும் நுண்ணிய முறையில் சிங்களக் கவிதைகள் பேசி இருக்கின்றன எடுத்துக் காட்டும் வகையிலான கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. இத்தகைய பல அனுபவங்களை வெளிப்படுத்தும் பல சிங்கள-தமிழ் சிறுகதைகள் நாவல்கள் நிறைய நாம் வாசித்திருப்பினும்,. அந்த அனுபவங்கள் தரும் உணர்ச்சிகளை உணர்வுகளைக் கவிதைகளில் பயிலுகின்ற பொழுது சிலிர்ப்பான ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு ஆளாக்கப்பட்டு அப்பிரச்சினைகளைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

சமகால நவீனசிங்களக் கவிதையின் போக்கை வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இத்தொகுப்பு தந்திருக்கிறது. இத்தொகுப்பில் அமைந்துள்ள வீச்சுமிக்க ஒவ்வொரு கவிதைகளைப் பற்றியும் தனித்தனியாகவும் விரிவாகப் பேசலாம். பேச வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் விரிவஞ்சி இரண்டு கவிதைகளைப் பற்றி அதுவும் சுருக்கமாகப் பேசலாம் என நினைக்கிறேன்.

ஒன்று, இத்தொகுப்பில் அமைந்துள்ள தக்ஷிலாஸ்வர்ணமாலி வின் 'அயல்வாசி' எனும் கவிதை. இக்கவிதை இருமொழி சமூகத்தின் இடையிலான உறவாடல், இருப்பு நிலை, பற்றியெலாம் பேசும். ஒரு சிங்களப் பெண்ணின் குரலில் வெளிப்படும் அக்கவிதை இப்படித் தொடங்குகிறது..

''நுரை நிறக் கண்களுடைய ரகு
ஆழப் புதைந்த விழிகள்'
எனத் தொடங்கி இடையில்,
பணம் வேண்டாமெனச் சொன்ன மாதம்
வாங்கி வந்தான் ரகு
சிறுவண்ணப்பூக்களிட்ட சேலையொன்றையும்
நிறைய வளையல்களையும்
சேலை உடுக்கத் தெரியாதென்றதும்
அணிவித்து விட்ட ரகு
அழகு பார்தான் வளையல்களையுமிட்டு
'பொட்டு' நான் கேட்டேன்.
இல்லாவிட்டாலும் பரவாயில்லை
என்றான் ரகு
என நகரும் அக்கவிதை இப்படி முடிக்கிறது
பிறக்கக் காத்திருந்த குழந்தையின் தந்தை
தோடம்பழபெட்டியினைத் தலையில் வைத்தபடி
அன்றாட உழைப்புக்காக நடந்து கொண்டிருக்கையில்
புறக்கோட்டையில் வெடித்த குண்டில்
மரித்துப் போன நாளன்று
துயருற்ற அளவுக்கு
கவலை தோன்றியது
இறுதியாக ரகு
என்னைப் பார்த்தபோது.

இக்கவிதை என்ன பேசியது? எதைப் பற்றிப் பேசியது? என்ற கேள்விகளுக்கு உதாரணமாகக் காட்டிய மேற்குறித்த வரிகள் பதில் அளிக்கின்றன.

அடுத்து இத்தொகுப்பில் அமைந்த கவிதையான டீ. திலகப்பியதாஸவின் ''யுத்தக்களமொன்றின் இறுதிக் கணம்'' எனும் கவிதையைப் பற்றி. இக்கவிதைக்கான முதல் வாசிப்பின் பொழுது உடனடியாக எனக்குப் புலம்பெயர் சூழலில் இயங்கும் ஈழத்தவரான ஆங்கிலத்தில் எழுதும் சுரேஷ் கனகராஜா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தலைப்பு 'கோப்ரல் பிரேமரத்னாவின் அஞ்சலிப்பா' '' அக்கவிதை இறந்து போன ஒரு கோப்ரலுடன் ஒரு தமிழர் பேச, பியதாஸாவின் இக்கவிதை ஒரு இராணுவ வீரர் அவருடன் போரிடும் எதிரி படை வீரனைப் பற்றியும், அத்தருணத்தில் நிகழப்போகும் மரணதைப்பற்றியும் யோசிக்கும் வகையில் அமைகிறது.. இக்கவிதையின் சில வரிகள் மட்டுமே உதாரணம் காட்டினால் மட்டும், இக்கவிதை வெளிப்படுத்தும் மனோநிலையை முழுமையாக வெளிப்படுத்தியதாக இருக்காது என்பதனால் முழுக் கவிதையையும் இங்கே தருகிறேன்

எனக்கு முன்னால்
என்னைக் குறிபார்த்தவாறு ஆயுதமொன்றை நீட்டியிருக்கும்
எதிரிப் படை வீரனை நோக்கி
நானொரு துப்பாக்கிக் குண்டை விடுவிக்கவே வேண்டுமா?
அவ்வாறு நான் செய்யாதுவிடின்
துப்பாக்கி ரவையொன்று வரும்
என்னுடலைத் தேடி
துளைத்துச் செல்லும் முகமாக
ஆகவே வெற்றி அவனுக்கா, எனக்கா?
அவன் முந்திக் கொண்டால்
நாளைச் செல்லக் கூடும்
அவனது பெற்றோரைப் பார்த்து வர
அல்லது அவன் வரும் வரைக்கும்
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
மனைவி பிள்ளைகளிடம்.
அவ்வாறாயின், உடனடியாக
இந்த ஆயுதத்தை இயக்க வேண்டியது நானா?
அப்பொழுதான் எனக்கு நாளை
சம்பளத்தோடு சில மாதங்கள்
விடுமுறை கிடைக்கும்
செல்ல முடியும்
நான் வரும் வரை
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
பெற்றோர், மனைவி பிள்ளைகளை
பார்த்து வர நாளை
ஆகவே முந்தி முதல் துப்பாக்கி ரவையில்
எழுதப்பட்டிருப்பது அவனது பெயரா
அல்லாதுவிடின் எனது பெயரா?

இக்கவிதையில் எங்கும் இன அடையாளச் சொல்லாடல்கள் இல்லை என்ற வகையில் உலகப் பொதுவான போர் கலாசாரத்தின் இக்கட்டான தருணங்களைப் பேசுவதாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் சில சொல்லாடல்கள் மூலம் இக்கவிதையில் ஒலிக்கும் குரலுக்குரியவர் யார்? என்றும் அவர் முன்னால் எதிரி படை வீரன் எவர் எனத்தெரிய வரும்.

ஆகத் தமிழில் சிங்களக் கவிதைகள் படிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் இக்கவிதைகளைத் தமிழில் தந்திருக்கும் ரிஷான் ஷெரீப்பின் இம்முயற்சி ஈழத்தில் சிங்கள மொழி கவிதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மிகக் கவனத்திற்குரிய முயற்சியாக இத்தொகுப்பு அமைகிறது. ஈழத்துக் கவிதை (கவனிக்க ஈழத்துத் தமிழ்க் கவிதை மட்டுமல்ல) வளர்ச்சியினைப் பற்றி (இந்தியக் கவிதை என்றால் மலையாளம் தெலுங்கு என்றெலாம் இணைத்துப் பேசுவது மாதிரி ) பேசுவதற்காகப் பயன்படும் என்பதோடு ஈழத்துக் கவிதை முயற்சிகளை (தமிழ் மட்டுமல்ல) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பு கவிதைகள் பயன்படும் என்று சொல்வதை விடப் பயன்படவேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

இறுதியாகத் தமிழக- ஈழத்து நவீன, பின்-நவீன கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்ல உத்தரவு. ''கட்டாயமாக இத்தொகுப்பினை வாசியுங்கள்''

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R