ஆஸ்திரேலியா: இலங்கை மாணவர்   கல்வி  நிதியம் 29 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்    அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்  ஆண்டு  முதல்  இயங்கும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  29  ஆவது   ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும்  11-11-2017  ஆம்  திகதி  சனிக்கிழமை  மாலை  5.00  மணிக்கு    மெல்பனில்  VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும்.    நிதியத்தின்  தலைவர்  திரு.விமல். அரவிந்தன்   தலைமையில் நடைபெறவுள்ள  29  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  நிதியத்தின் உறுப்பினர்களின்    ஒன்றுகூடலும்  தகவல்  அமர்வும்  இடம்பெறும். இலங்கையில்    நீடித்த  போரில்   பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ் மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்காக  1988  ஆம்   ஆண்டு   தொடங்கப்பட்ட நிதியம்,   இதுவரையில்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு   உதவியுள்ளது.    நூற்றுக்கணக்கான  மாணவர்கள்  நிதியத்தின் உதவியினால்   பல்கலைக்கம் பிரவேசித்து,  பட்டதாரிகளாகியிருப்பதுடன்  மேலும்  பல மாணவர்கள்   அரச  மற்றும்  தனியார்   துறைகளிலும்  பணியாற்றுகின்றனர். மேலும்   பல  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  நிதியம்    உதவவேண்டியிருப்பதனால்  மேலதிக  விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும்  29  ஆவது    ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல்   அமர்வும்  ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு:   இக்கூட்டத்தில்   இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள விரும்பும்    நிதியத்தின்  உறுப்பினர்களும்  அன்பர்களும்  தமது  வருகையை   தயவுசெய்து  தாமதமின்றி  உறுதிப்படுத்தவும்.   இந்த  ஒன்றுகூடல்   இராப்போசன   விருந்தில்   கிடைக்கப்பெறும் நன்கொடைகள்,   கல்வி   நிதியத்தின்   வளர்ச்சிக்கு    வழங்கப்படும்.

மேலதிக  விபரங்களுக்கு :
திரு. விமல் அரவிந்தன்   ( தலைவர்)    0414 446 796
திருமதி.  சத்தியா  சிவலிங்கம்  (செயலாளர்)   0432 281 961
திருமதி. வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா ( நிதி;ச்செயலாளர் ) 0404 808 250
திரு.  லெ.முருகபூபதி   (துணை  நிதிச்செயலாளர்)  0416 625 766

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R