கவிதை: முகமூடி - நிலாரவி.

1. கவிதை: முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி

பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

நண்பனிடம் பகைவனிடம்
காதலியுடன்
அன்னியனுடன்
எஜமானிடம்
வேலைகாரனிடம்
என
ஒரு வித்தைக்காரன்
பலவண்ண குல்லாக்களை
மாற்றி மாற்றி அணிவது மாதிரி
என் முகமூடிகள் மாறிக்கொண்டிருந்தன...

முகமூடிகளே
முகமாகிப்போன பின்னும்
நிறக்கண்ணாடிகளே
கண்களாகிவிட்ட பின்னும்
என் உலகின் நிறமும் மாறியிருந்தது

எந்த இடத்தில் நானிருக்கிறேன் என
என்னை தேடி சலித்துவிட்டது...

இப்பொதெல்லாம்
கடவுளின் முன்
முகமூடிகளை களைத்துவிட்டு
நிற்பது தான்
பொய்மையாக படுகிறது.


2. காகங்கள்

இருள்நிறப் பறவைகள்
கிளைகள் முழுதும்
நிறைந்திருந்தன.
கரிய அலகும்
கழுத்துச் சாம்பலுமாய்
தீட்டப்பட்ட கருப்பு ஓவியங்கள்
ஓர் உயிர்மெய் எழுத்தின்
குறில் நெடிலாய்
அவைகளின் மொத்த பாஷையும்
முடிவடைந்துவிடுகிறது
அழைப்பாய் ஆனந்தமாய்
அறிவிப்பாய் காதலாய்
சுகமாய் சோகமாய்
அனைத்துமாய்
கரைகின்றன காகங்கள்
அதன் ஒற்றைச் சொல்மொழியில்..
கண்டவுடன் உண்பதில்லை
காகங்கள்
உயிர்களின் உணவு யுத்தத்தில்
கூடுகள்  தாண்டிய   ஆகாரப்பகிர்வு காகங்களுடையது.
தனிஒருவனுக்கு உணவு கிடைத்தவுடன்
சகத்தினை அழைக்கின்றன அவை.
தலைமுறைகளாய்தான்
தொடர்கிறது
காகங்களோடு
மனிதர்களின்
உறவு...
அம்மாவின் படையலிலும்
மூதாதிகளாய் வந்துவிடுகின்றன
சில காகங்கள்...
காகங்கள் என்றும்
நம் சிநேகங்கள்...
விருந்து கண்டு கரையும் பறவைகள்
விருந்தினரின் வரவுக்காகவும் கரைகின்றன
வீடுகளின் கூரைகளில்
கருமையின் அழகை
கரைந்து கரைந்து அறிவிக்கும்
இருள் நிறப் பறவைகளின்
இதயம் முழுவதும் வெளிச்சங்கள்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R