-

புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. -

அமரதேவ!

ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!

சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!

அவன்தான்...!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா! அமரதேவா என்று
அழகான பெயரில் தன்னை
அலங்கரித்தானோ என்னவோ?
இமயத்தைத் தொட்டது இவன்
கவியுங் கானமும்...!

இந்துஸ்தானி இசைக்காக
இவனைத்தேடி வந்தது
இந்தியப் பத்மசிறீ விருது!

எண்பத்தாறில் இந்திய இமயம்
இந்த விருதை வழங்கியபோது
விண்ணேறிப் பறந்தது இவன்
வித்துவம்...!

பிலிப்பைன் மெக்சைசே விருது
இரண்டாயிரத்து ஒன்றின்
கரங்களில் மிதந்தது...!

மாலைதீவு நாட்டின் தேசிய கீதமும்
இவனது வண்ணத்தில்
வார்த்தெடுக்கப்பட்டது!

தேசிய துக்கதினம் என்று
இலங்கைத்தேசம் துயர் பகிர்கிறது!

தேசியக்கொடி அரைக்கம்பத்திற்கு
இறக்கப்பட்டு அரசாங்கம்
யாசகம் அரங்கேற்றுகிறது...!

யான் முதற் கூறியபடி
சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!

முதன்முதலாக...
இலங்கையின் ஒரு சனபதியால்
சிவிகை சுமக்கப்பட இந்தக்
கவிஞனின் பயணம்
அவிசொரிந்த அனலில் மறைந்தது!

சனாதிபதி மைத்திரி சிறிசேனா
சரித்திரத்தில்...
சிவிகை சுமந்த சிறிசேனா
ஆகிவிட்டிருக்கிறார்!

அமரதேவவுக்கு மட்டுமல்ல
சாமான்யனாக... ஒரு
சனாதிபதியாக
மைத்திரி சிறிசேனவுக்கும் ஒரு
வரலாறு ஈதென்பேன்...!

அமரதேவ  அமரத்துவம்
சாந்தியடைவதாக!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R