சுரேஷ் அகணிசிக்காகோ  ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம்  ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.

“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன்  கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில்  அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும்  ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.

சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.

உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள். ஒரு சில மாணவர்கள் அங்கு ஏற்பட்ட நட்பின் பின்பு பல்கலைக்கழகத்தில் யார் தமது ரூம் மேற் என்பதையும் தெரிவு செய்து கொண்டார்கள். அந்த வகுப்பறை சில காதல் சோடிகளையும் உருவாக்கி விட்டது.

சுதன் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பல்வைத்தியத் துறைக்கு அனுமதி பெற்ற ரேகாவையும், குமார் கொழும்பு மருத்துவத் துறைக்கு அனுமதி பெற்ற நீராவையும் காதலித்தார்கள்.

சுதன், குமார் இருவரிடம் காணப்பட்ட நட்பு வட்டத்தில் ரேகா, நீராவும் சேர்ந்து கொண்டார்கள். நால்வரும் அடிக்கடி சேர்ந்து சுற்றித் திரிந்தார்கள். சினிமா பார்க்கவும் சென்றார்கள். காலமும் நாட்களாக, வாரங்களாக, மாதங்களாகப் பறக்க இந்த நால்வரும் ஒரு திசையில் பயணித்த இருசோடிக் காதல் பறவைகளாய்ப் பறந்தனர்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஒருநாள் ரேகாவுக்கும், நீராவுக்கும் இடையில் போர் மூண்டு விட்டது.  ரேகாவும், நீராவும் தாம் மருத்துவத் துறை படிக்கப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தவர்கள். ஒரு சில புள்ளிகள் குறையப் பெற்றதால் நீரா பல்வைத்தியத் துறைக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தாள். இதனால் நீரா மனதில் கவலையுடன் தான் இருந்தாள்.

ஒருநாள் ரேகா நகைச்சுவையாக நீராவிடம் “ நீ ஆட்களின் பல் மட்டும்தானே கவனிக்கப் போகிறாய்” என்று கேலியாகக் கூறி விட்டாள்.

ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்த நீராவுக்கு ரேகா கூறியது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

“நான் யோசிக்காமல் கூறி விட்டேன். என்னை மன்னித்துக் கொள் நீரா” என்று சொல்லி ரேகா எவ்வளவோ மன்றாடியும் நீராவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
சுதன், குமார் பல கட்டப் பேச்சுவார்த்தை செய்தும் முடியாமல் போகவே ரேகாவும், நீராவும் நிரந்தரமாகப் பேசாமல் விட்டு விட்டார்கள். நீரா மேலும் ஒருபடி மேல் சென்று குமாரையும் சுதனுடனோ அல்லது ரேகாவுடனோ ஒரு நாளும் பேசக்கூடாது என்ற சொல்லி விட்டாள்.

அன்று   ஏற்பட்ட பிரிவுக்குப் பின்பு குமாரும்  சுதனும் கடந்த முப்பத்தாறு வருடங்களாகப் பேசவேயில்லை. இன்றுதான் மீண்டும் குமாரைச் சந்திப்பதற்காக ரொறன்ரோ நோக்கிப் பிரயாணம் செய்கின்றான் சுதன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு கான்சர் சம்பந்தமான ஆய்விலும், கான்சர் சிகிச்சையிலும் ஈடுபட்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சுதனின் தொடர்பு இலக்கங்களைத் தற்செயலாகப் பெற்றுக் கொண்ட  குமார் சுதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு,

“டே சுதன் குமார் பேசுறன். எப்படி இருக்காய்” என்று கேட்க, சுதன் “ யார் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் படித்த குமாரா” என்று கேட்டான்.
“ஆமாம். சுதன். சில தினங்களுக்கு முன்தான் உனது தொலைபேசியை இணையத்தளமொன்றில் இருந்து எடுத்தேன். எப்படி இருக்கிறாய்.” என்று தொடங்கி நீண்ட நேர உரையாடலை சுதனுடன் குமார் செய்தான். 

ஒரு கட்டத்தில் “நீரா எப்படி இருக்கிறா” என்று கேட்டான் சுதன்.

“அவள் நன்றாக இருக்கிறாள். நாங்கள் ஒவ்வொரு செக்கனும் இணைந்தே இருக்கிறோம்” என்றான் குமார்.

உடனே சுதன் “டே குமார் நீ பேசுவது நீராவுக்குத் தெரியுமா?” என்று கேட்டதும் இந்தக் கேள்வியின் அர்த்தம் நன்கு புரிந்தவனாக……………….

“உனக்குத் தெரியுமா? உன்னையும் ரேகாவையும் தேடிப் பிடித்து உறவு கொண்டாடுமாறு சொல்லிப் பலவருடங்கள் ஆச்சு. எங்கள் பிரிவுக்கு தான் காரணமாகி விட்டேன் என்று பலதடவை எனக்குக் கூறி கவலைப்பட்டாள்”

“அப்படியா குமார். எனக்குப்  பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. கொஞ்சம் பொறு. ரேகா இதனைக் கேட்டால் மிகவும் சந்தோ~ப்படுவாள். நீயும் அவளுடன் பேசு" என்று சொல்லி விட்டு ரேகாவிடம் தொலைபேசியைக் கொடுக்க குமார் ரேகாவுடனும் சில நிமிடங்கள் பேசினான்.

இப்பொழுது குமாரையும், நீராவையும் நேரில் சென்று பார்ப்பதற்காகவே சுதனும், ரேகாவும் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தூக்கத்தில் இருந்து விழித்த ரேகா சுதன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்ததைக் கண்டதும் “என்னப்பா கடுமையாய் யோசிக்கிறியள்” என்று கேட்டாள்.

சுதன் “ஒன்றுமில்லை, கடந்த கால நினைவுகளை நினைச்சுப் பார்த்தன். குமாரோடு எவ்வளவு நெருங்கிப் பழகி …. தேவையில்லாத ஒரு பிரச்சினையால் இவ்வளவு காலம் ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கிறம்…” என்றான்.

“எல்லாம் விதி. நான் எதுவும் யோசிக்காமல் ஏதோ சொல்ல நீரா அதைப் பெரிசாய் எடுக்க ம்ம்…… எங்களிருவரால் உங்கள் இருவரின் நட்பும் முறிந்து விட்டது.”  என்று கவலையுடன் சொன்னாள் ரேகா.

“சரி நீர் கவலைப்படாதையும். இப்பவாவது ஒரு முடிவு வந்திருப்பதை நினைச்சு மகிழ்ச்சியடைவம்” என்றான் சுதன்.

******************************
ரொறன்ரோ பியர்~ன் சர்வதேச விமானநிலையத்தில்…………பகல் 12:30 இற்கு விமானம் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்து இறங்கிப் பொதிகளை எடுத்துக் கொண்டு குடிவரவு அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் காட்டி அனுமதிகளைப் பெற்று  சுங்க இலாகா இடத்தையும் தாண்டி வெளியே வரும்பொழுது பல உறவினர்கள் தத்தமது விருந்தினர்களை வரவேற்கக் காத்திருந்தனர். ஒரு சிலர் கையில் பூச்செண்டுகளை வைத்திருந்தனர். சிலர் விருந்தினர்களின் பெயரை எழுதிய அறிவித்தல் பலகைகளை கைகளில் தாங்கியிருந்தனர். இவர்களுக்குள் தான் குமாரும் நிற்பான் என்ற எண்ணத்தில் சுதனின் கண்கள் நோட்டம் விட்டன.

ஒருவரின் தலையில் ஒரு டியிற்றல் டிஸ்பிலே இருந்தது. அதில் “நண்பன் சுதனே வருக!” என்ற அறிவித்தல் காணப்பட்டது.

“அடேயப்பா. இவர்தான் குமாரா. அந்தக் காலத்து குமாருக்கும் இவனுக்கும் இடையில் ஒரு தொடர்பையும் காணவில்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ரேகாவுக்கும் கையால் குமாரைக் காட்டினான். அப்போதுதான் இவர்களைக் கவனித்த குமார் இவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தவாறு  இவர்களை நோக்கி வந்தான்.

அருகில் வந்ததும் குமாரும், சுதனும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினார்கள். இருவரின் கண்களும் கலங்க ஒருவரையொருவர் கட்டித் தழுவியவாறு ஒரு சில நிமிடங்கள் நின்றதைக் கவனித்த ரேகாவின் கண்களும் கலங்கி விட்டது.

குமார் ரேகாவுக்கும் கைகுலுக்கி அவளை அவளை வரவேற்றான்.

சுதன் ஒருவாறு தன்னைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்த பின்பு குமாரினை உற்று நோக்கினான். சுதனின் கண்களில் குமார் ஒரு விஞ்ஞான மேதையாகவே காட்சியளித்தான். அதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது. குமார் ஒரு மின்னணுவியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் உள்ளவன் தானே. ஆனால் அமெரிக்காவில் எனது பல நண்பர்கள், பேராசிரியர்களாகவும், ஆய்வாளர்களுமாக உள்ளனர். அவர்கள் யாரிலும் இல்லாத ஒரு தோற்றம் குமாரில்…….ஆனால் அவர்களுக்கும் குமாருக்குமிடையில் ஒரு ஒற்றுமையிருந்தது. பேசும்பொழுது அவன் வாய்மட்டும் பேசியது. அவன் தலைக்குள் பல சிந்தனைகள் ஓடுவதுபோன்று அவன் செய்கைகள் இருக்கும். ஏன் சுதனிலும் இந்தப் போக்கு இருப்பதாக ரேகா அடிக்கடி முறையிடுவதுண்டு.

“கனக்கப் படிக்க படிக்க நாமெல்லாம் இப்படியாய் மாறிவிடுகிறோமா?” என்று தனக்குள் சுதன் சொல்லிக்கொண்டான்.

குமார் கையில் ஒரு ரிமோர்ட் வைத்திருந்தான். இவர்களுடன் பேசிக்கொண்டே ரிமோர்ட்டில் ஒரு பட்டனை அழுத்தினான்.

அவன் தலையில் காணப்பட்ட டிஜிற்றல் டிஸ்பிளே சுருங்கி உருவத்தில் நன்றாகச் சுருங்கிப் பின் தலைப்பகுதியால் இறங்கிக் கழுத்தில் அவன் போட்டிருந்த சங்கிலியில் உருண்டு முன் கழுத்துப் பகுதிக்கு வந்து அழகிய பென்ரனாக உருமாறி அவனது சங்கிலியில் தொங்கியது.

குமார் செய்யும் மந்திர வித்தையை அல்லது விஞ்ஞானச் சாதனையை உற்று நோக்கிக் கொண்டிருந்த சுதன் ரேகாவையும் கையால் சுரண்டிக் காண்பித்தான். அவளும் வியப்புடன் பார்த்தாள்.

குமார் சுதனுக்கும், ரேகாவுக்கும் அருகில் வந்து திரும்பவும் ரிமோர்ட் இனை அழுத்திக் கொள்ள ஒரு மைக்கிரோ போன் முன்னர் டிஜிட்டல் டிஸ்பிளேயாக காட்சியளித்து இப்பொழுது ஒரு பென்ரன் ஆக மாறிக் குமாரின் கழுத்துச்  சங்கிலியில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த அதிசயப் பொருளுக்குள் இருந்து புறப்பட்ட ஒரு தண்டு போல் வெளிவந்து மரத்திலேறும் பாம்பு போல் வளைந்து  குமாரின் வாயடிக்கு வர “நீரா உன் ஆசைப்படி சுதனும், ரேகாவும் வந்திட்டார்கள் எங்களைப் பார்க்க…. அவர்களுடன் பேசு” என்று மைக்கிரோ போனில் சொன்னான்.

இப்பொழுது அவன் சங்கிலியில் தொங்கிய அதே பொருள் ஒரு ஸ்பீக்கராக உருவெடுக்க அதிலிருந்து “வாருங்கள் சுதன், ரேகா. மிக்க மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க நெடுநாளாக ஆசைப்பட்டேன்.” என்றது நீராவின் குரல்.

சுதனும், ரேகாவும் குமாரின் இத்தகைய விந்தைச் செயல்களையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு குமாரைப் பின்தொடர்ந்தார்கள்.

சுதனுக்குத் தலை சுற்றியது.

“அடே குமார் என்னடா செய்யுறாய்” என்று அவன் கையிலிருந்த ரிமோர்ட்டைக் காட்டிக் கேட்டான் சுதன்.

“பயப்படாதே சுதன். படித்த விடயங்களில் சிலவற்றை என் நாளாந்த வாழ்க்கையில் நிஜமாக்கி வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றான் குமார்.
“குமார் யு ஆர் கிரேட்” என்று சொல்லி குமாரின் தோளைத் தட்டினான் சுதன்.

வாகனத் தரிப்பிடத்துக்கு வந்ததும் வாகனத்தரிப்பிற்கான கட்டணத்தைக் கட்டி விட்டு திரும்பவும் வித்தை காட்டத் தொடங்கினான். குமார்.

அதே ரிமோர்ட் பட்டனை அழுத்தினான்…..….மைக்கிரோபோன்  திரும்பவும் வந்தது. “நீரா நாங்கள் காரில் ஏற ரெடி. நாங்கள் பி 2 லெவல் பேமன்ற் மெசின் உள்ள பக்கத்தில் நிற்கிறோம். றிமோர்ட் இனை ரேஸ் பண்ணி அனுப்பி வை” என்றான்.

“என்னடா இவன் நீரா வீட்டில் என்றான். இப்ப அவளையே கூப்பிட்டுக் காரை அனுப்பு என்கிறான்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சுதன்.

ஐந்து நிமிடத்தில் ஒரு ஜீப் வந்து அவர்கள் முன்னே நின்றது. “நீரா தான் ஜீப் ஓடுகிறாளா அல்லது டிரைவர் வைத்து இருக்கும் அளவிற்கு” என்று சொல்லிக் கொண்டு எட்டிப் பார்த்தான்” குமார்.

“என்ன ஆச்சரியம். காருக்குள் எந்தச் சாரதியும் இல்லை. டிரைவர் இல்லாத ஜீப்பா” சுதன் கேட்டான்.

“ஆம். சுதன். இன்னும் ஒரு பரீட்சார்த்த நிலையில்தான் இருக்குது. குறுகிய இடங்களுக்கு மட்டும் சாரதி இல்லாமல் எனது ஜீப்; ஓடும். இன்னும் சில காலத்தில் முழுமையாக சாரதி இன்றி ஓடவைக்கலாம்.” என்றான் குமார். 

“கடவுளே. நல்ல காலம். சாரதியில்லாத ஜீப்பில் போகவேண்டியிருக்கும். நினைக்கவே பயமாக இருக்கு.”  என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சுதன்.

சாமான்களை ஏற்றி விட்டு குமார் சாரதி சீற்றில் ஏற சுதனும்; ஏறி முன் சீற்றில் அமர்ந்தான். ரேகா பின்னுக்கு ஏறினாள்.

ஜீப் ஓடத் தொடங்கிச் சில நிமிட நேரத்தில் நீராவின் குரல் ஒலித்தது. “ ரேகா நீங்கள் இருவரும் கோழி இறைச்சி, முட்டை எல்லாம் சாப்பிடுவீர்களா? ”

சுதனுக்குத் தலை சுற்றியது.

“ரேகா பயப்படாமல் பதில் சொல்லுங்கோ. எங்களுக்கு மதிய உணவு தயார் செய்யத்தான் கேட்கிறா” என்றான் குமார்.

ரேகா தயக்கத்துடன் “ஆம் நீரா சாப்பிடுவோம் மிக்க நன்றி ” என்றாள்.

உடனே “யு ஆ வெல்கம்”. என்று நீராவின் குரல் வந்தது.

ஒரு சில நிமிடத்தில் மீண்டும் நீராவின் குரல்…

“உங்களுக்குப் பிடித்த பாடலை போடுகிறேன். கேளுங்கள்…..” என்று ஒலித்தது.

பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

குமாருடன் சுதன் பேசிக் கொண்டு வந்தான்.

ரேகா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்……

பல பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு “ குமார், நீரா எப்படி எல்லாப் பாட்டுக்களையும் எனக்குப் பிடித்த பாடல்களாகத் தெரிவு செய்திருக்கின்றா” என்றாள் ரேகா.
“உங்கள் தெரிவுப் பாடல்கள் எல்லாம் உங்கள் முகநூல் மூலம் அறிந்திருக்கிறோம்” என்றான் குமார்.

“என்ன ஆச்சரியம் குமார். இவ்வளவு தூரம் நீங்களும், நீராவும் கவனிக்கின்றீர்கள். இவ்வளவு காலமும் உங்களிருவரிடம் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்றுதான் கவலையாக உள்ளது” என்றாள் ரேகா.

“உண்மை ரேகா. அந்தக் கவலை எங்களிருவருக்கும் நிறையக் காலமாய் இருந்தது.” என்றான் குமார்.

“எங்களுக்கு முதலே தெரிந்திருந்தால் நீராவிடம் ஓடி வந்திருப்பம்” என்றாள் ரேகா.

குமாரின் வீட்டுக்கு முன்பாக ஜீப்பை நிறுத்தினான் குமார்.

“கொஞ்சம் பொறுங்கள். ஜீப் வா~pங் செய்யப் போகுது” என்றான்.

“வெயிட் ரு ஓபின்த டோர், ஜீப் வா~pங் ஓன்” என்று நீராவின் குரல் ஒலித்தது.

ஜீப்பைச் சுற்றி குழாய்கள் சிறிதாக முளைத்தன. தண்ணீர் விசிறியடித்தது.

திரும்பவும் “ வெயிற் ஜீப் றையிங் ஒன்” என்று நீராவின் குரல் ஒலித்தது.

ஜீப்பைச் சுற்றியிருந்த காற்றாடிகள் காயவைத்தன.

திரும்பவும் “வெயிற் ஜீப் பொலிசிங் ஓன்” என்று நீராவின் குரல் ஒலித்தது.

காரைச்சுற்றி பொலிஸிங் நடந்தது.

“அடேயப்பா அமெரிக்கா கனடாவிடம் தோற்று விட்டதே” என்றான் சுதன்.

குமார் சிறிய புன்முறுவலுடன் பாராட்டை அமைதியாக ஏற்றுக் கொண்டான்.

இப்பொழுது “ ரெடி ருகெற் டவுண்” என்றது. ஜீப் கதவுகள் தன்னிச்சையாகத் திறந்தன.

இப்பொழுது குமார் ரிமோர்ட்டை அழுத்த வீட்டுக் கதவடியில் இருந்து ஒரு பாலம் போன்று விரிந்து ஜீப் மட்டும் வந்தது. குமார் அவர்களின் பொதிகளைத் துர்க்கி அந்தப் பாலத்தில் வைக்க அவை தன்னிச்சையாக அசைக்கப்பட்டு வீட்டுக் கதவடியில் வந்து நின்றன.

கதவடிக்கு சுதனும், ரேகாவும் குமாரைப் பின் தொடர்ந்து வந்ததும் கதவு திறந்தது.

“வாருங்கள் சுதன், ரேகா. குமாரும் நீராவும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.” என்று நீராவின் குரல் ஒலித்தது.

சுதனும், ரேகாவும் வீட்டுக்குள்ளே வந்து சோபாவில் இருந்தார்கள்.

குமாரும் வந்து அவர்களுக்கு எதிராக இருந்து பேசிக்கொண்டிருந்தான்.

குமார் அவர்களுடன் பேசியவாறு றிமோர்ட் இல் பட்டனை அழுத்தினான். ஒரு சில நிமிடங்களில் நீராவின் குரலில் “என்ன குடிக்கிறீர்கள், ஒரேஞ் யூஸ், அப்பிள் யூஸ்” என்று ஒலித்தது.

“அப்பிள் யூஸ் ஓகே  நன்றி நீரா” என்று ரேகா பதிலளித்தாள்.

சிறிது நேரத்தால் ஒரு ரோபோ அப்பிள் யூஸ் கொண்டு வந்து சுதனுக்கும், ரேகாவுக்கும் பரிமாறியது. ஆச்சரியத்துடன் சுதனும், ரேகாவும் ரோபோவைப் பார்த்தார்கள். இப்பொழுது இவனுக்கு 4 வயது. இவன்; பெயர் ரோமி என்று குமார் அந்த ரோபோவை அறிமுகம் செய்து வைக்க அந்த ரோபோவும் இவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டுச் சென்றது.

சுதனும், ரேகாவும் அப்பிள் யூஸ் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் போன்று எழுத்துக்கள் ஓடியது.

“இவன் குமார் தனது றிமோர்ட் இல் திரும்பவும் பட்டன்களை அழுத்தியிருக்கிறான் போல் உள்ளது.” என்று சுதன்; தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

“தயாரிப்பு குமார் அன் நீரா” என்று தொலைக்காட்சியில் வந்ததைக் கண்டதும் “என்னடா குமார் படம் எல்லாம் தயாரிக்கிறீங்கள் போல் உள்ளது” என்று சுதன் கேட்க “அப்படியெல்லாம் இல்லை. ஹோம் மேட் டொக்கியுமென்ரரிதான் பார்த்து விட்டு சொல்லு எப்படியென்று” என்றான் குமார்.

அந்தக் காணொளி குமார், நீரா பற்றியதென்று தெரிந்தது.

குமார், நீராவின் படங்கள், படங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட அனிமே~ன்ஸ் எல்லாம் வந்து கொண்டிருந்தன.

சுதன், ரேகாவின் படங்கள் எல்லாம் வந்தன. நால்வரும் நட்புடன் திரிந்த காலம் பற்றியெல்லாம் காட்சிகள் ...
...
ரேகாவின் கண்கள் கலங்கின. சுதனும் சிரமப்பட்டு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

குமார், நீரா திருமணக் காட்சிகளும் வந்தன.

அந்தக் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது “நீங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு பார்க்கலாமே.” என்று நீராவின் குரல் வந்தது.
அப்பொழுது குமாரும் “சாப்பாடு ரெடி வாங்கள் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து நீங்கள் பார்க்கலாம்.” என்று அழைத்தான்.

“உங்கள் திருமண வீட்டுக் காட்சிகள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நல்ல ரைமிங். கலியாணவீட்டுச் சாப்பாடு என்று நினைத்துச் சாப்பிடுவோம்” என்றான் சுதன்.
எல்லோரும் சென்று சாப்பிட அமர்ந்தார்கள். அந்த ரோபோ மேசைக்கு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து வைத்தது. அவர்களுக்கு பிடித்த கறிகள். மிகவும் ருசியாக இருந்தது.
சுதனுக்கும், ரேகாவுக்கும் நீரா எங்கே என்ற கேள்வி மனதில் எழத்தொடங்கியது. குமார் எதையோ மறைக்கின்றான். அவனே சொல்லும் வரை காத்திருப்போம் என்ற மனநிலையில் போலும் அவர்கள் குமாரிடம் எதுவும் கேட்கவில்லை.
“சாப்பாடு மிகவும் ருசியாக உள்ளது” என்றாள் ரேகா.
அப்பொழுது சமையல்காரனை அழைத்து “உங்கள் பாராட்டு இவருக்குத்தான் சேரணும்” என்று கூறிச் சமையல்காரனை அறிமுகம் செய்து வைத்தான்.
இப்பொழுது நிச்சயமாக நீரா அங்கு இல்லை. அவள் சமைக்கவும் இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும் சுதனும், ரேகாவும் எந்த கேள்வியும் கேட்காது சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவுவதற்காக எழும்பும் பொழுது சமையலறையில் சென்று கழுவுமாறு சொல்ல சுதனும், ரேகாவும் சமையலறைக்குள் வந்தார்கள். சமையலறை மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அந்த ரோபோ இவர்கள் கை கழுவியதும் கை துடைக்கத் துணி கொடுத்தது. மிகவும் தொழில்நுட்பமும், அழகும் நிறைந்த ஒரு சமையலறையாக இருந்தது.

அவர்கள் திரும்பவும் சமையலறையில் நின்ற சமையல்காரனுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு ஹோலில் வந்து சோபாவில் அமர்ந்தார்கள்.
குமாரும் வந்து அவர்களுடன் இருந்து பேசிக்கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் தொலைக்காட்சியை ஓன் பண்ணினான் குமார். காணொளி தொடர்ந்தது.
குமாரும், நீராவும் சென்று பார்த்த இடங்கள், அவர்களின் சாதனைகள் என்று எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இடைக்கிடை குமாரும் மேலதிக விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் நீரா நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும் காட்சி வந்தது. உடனே ரேகாவும், சுதனும்; ஒரே நேரத்தில் “நீராவுக்கு என்ன நடந்தது. ஏன் வைத்தியசாலையில் இருந்தவா?”  என்று குமாரைப் பார்த்துக் கேட்டார்கள்.

குமார் அழத் தொடங்கினான். சுதன் எழும்பி குமாரைத் தழுவி “ஏன் அழுகிறாய்? நீராவுக்கு என்ன நடந்தது?” என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டான்.

ரேகாவும் “குமார் என்னவென்றாலும் சொல்லுங்கோ?” என்று கூறினாள்.
“நீரா என்னை விட்டுப் போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அவளுக்கு கான்சர் வந்து செத்து விட்டாள்” என்று சொல்லி விட்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்.
சுதனும், ரேகாவும் எதுவும் பேசமுடியாதவர்களாக குமாரை ஆறுதல்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்திற்கு “உங்களுக்கு கஸ்டமாய்த்தான் இருக்கும். தயவுசெய்து மிகுதிக் காணொளியையும்  பாருங்கள். இந்தக் காணொளியையும் உங்கள் இருவருக்கும் தான் நானும் நீராவும் காணிக்கை செய்திருக்கின்றோம்.” என்றான் குமார்.

காணொளி தொடர்ந்தது. இப்பொழுது சுதனும், ரேகாவும் கண்ணீர் மல்கக் காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நீரா நோயினால் பட்ட இன்னல்களைப் பார்த்து ரேகா விம்மி விம்மி அழுதாள். நீராவின் இறுதிக்கிரியை கூட கொஞ்சம் படமாக்கப்பட்டிருந்தது.
இறுதியில் குமார் சொல்லியவாறு காணொளியின் இறுதியில் “இவ்வுலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் அருமை நண்பர்கள் சுதனுக்கும், ரேகாவுக்கும் காணிக்கை செய்கின்றோம்” என்ற தகவலும் தொலைக்காட்சியில் வந்தது.

காணொளி முடிந்ததும் சுதன் திரும்பவும் எழும்பிக் குமாரைக் கட்டித் தழுவி தனது துயரத்தை தெரிவித்துக் கொண்டு “நாங்கள் எல்லோரும் எழும்பி ஒரு நிமிடம் நீராவுக்கு அஞ்சலி செலுத்துவோம்” என்று சொல்ல எல்லோரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்பு எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் குமார் தனது கவலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சுதனையும், ரேகாவையும் பார்த்து பேசத் தொடங்கினான்.

“உங்கள் இருவரையும் தான் உயிரோடு இருக்கும் பொழுது பார்க்க வேண்டும் என்று நீரா ஆசைப்பட்டாள். என்னால் அவளின் ஆசையைத் தீர்த்து வைக்க முடியவில்லை. நீங்கள் விமான நிலையத்தில் வந்து இறங்கியது முதல் நீங்கள் கண்டவை, கேட்டவையெல்லாம் நானும், நீராவும் சேர்ந்து உருவாக்கிய விஞ்ஞானச் சாதனைகளின் சிறிய ஒரு பகுதி மட்டும்தான். இந்த வீடு முழுவதும் ஏராளமான விஞ்ஞானச் சாதனைகளை காட்சிப்படுத்தியிருக்கிறோம். நீங்கள் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியப்படுவீpர்கள். இந்த வீடு முழுவதும் நீராவின் படங்கள், உரையாடல்கள், அவளின் வயலின் இசை, அவளின் ஆய்வுத்தகவல்கள் என்று நிறைய காட்சிப்படுத்தியிருக்கின்றோம். அவள் நிஜமாகவே இருக்குமாப்போல் நீராவைப் போலவே ஒரு அற்புதமான ரோபோவை உருவாக்கி படுக்கையறையில் வைத்திருக்கின்றேன். இப்பொழுது அவளால் வீட்டின் மேற்பகுதியில் உள்ள எல்லா இடங்களுக்கும் நடக்க முடியும். என்னோடு உரையாட முடியும். எனது உடுப்புக்களையெல்லாம் ஒழுங்கு செய்து நீரா செய்வது போன்று செய்ய முடியும்.

ஆர்ட்டிபி~ல் இன்ரெலியன்ஸ் என்பது மனிதனில் காணப்படும் நுண்ணறிவுகளைக் கொண்ட அமைப்புக்களை வன்பொருட்களையும், மென்பொருட்களையும் கொண்டு உருவாக்கிக் கொள்வது. ரோபோக்கள் எல்லாவற்றின் அடிப்படை ஆர்ட்டிபி~ல் இன்ரெலியன்ஸ் தான்.  ஆர்ட்டிபி~ல் இன்ரெலியன்ஸ் என்ற விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் நிறைந்த துறையானது கணினிவியல், பொறியியல், உயிரியல், மொழியியல், கணிதம் என்று பலதுறைகளின் சேர்க்கையாக உள்ளது. அதனைத் தமிழில் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்வாக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலம் எக்ஸ்பேர்ட் சிஸ்ரம் எனப்படும் நிபுணர் அமைப்புக்களை உருவாக்கி உன்னைப் போன்ற துறைசார் நிபுணர்களின் அறிவை இவ்வுலகில் நிரந்தரமாக பயனுள்ளதாக்கப்பட முடியும். பிரெயினா போன்று நாளுக்கு நாள் புதிய புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் உருவாகி வருகின்றன. இவ்வாறான மென்பொருட்கள் மூலம் இலகுவாகப் பல விஞ்ஞானச் சாதனைகளை ஏற்படுத்த முடியும்.
கனடாவில் மட்டுமன்றி உலகத்திலேயே அதிக தொழில்நுட்பம், தன்னியக்கப்படுத்தல் நிறைந்த ஒரு இயந்திர வீடாக எனது வீடு மதிக்கப்படுகிறது. எனது வீட்டைப்பார்ப்பதற்கு உலகெங்கும் இருந்து வருடமொன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட விருந்தினர்கள், ஆய்வாளர்கள் என்று வந்து செல்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் நன்கொடை கான்சர் ஆய்வுக்கும், கான்சர் நோயினால் அவதியுறுபவர்களின் சிகிச்சைக்கும் செல்கின்றது. சுதன் நீ; கான்சர் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை பற்றியும், கான்சர் பற்றிய ஆய்வுகள் பற்றியும் அறிந்து கொண்டேன். உனது ஆய்வுத் தேவைகளுக்கும் நான் நன்கொடை தந்து உனது ஆய்வுப்பணியை ஊக்கப்படுத்த விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல நவீன ஆட்டிபி~ல் என்ஜினியரிங் மென்பொருட்கள் மூலம் கான்சர் நோய் பற்றி உனது அறிவை னொலேஜ் பே~; ஆக்கி இந்த உலகம் முழுக்கப் பயன்படுமாறு செய்ய விரும்புகின்றேன். இத்தகைய மென்பொருட்கள் மூலமே இந்த வீடு பூராவும் பல கணினிச் சாதனைகளை உருவாக்கியுள்ளேன். இந்த அபூர்வ வீட்டில் நான் என்றென்றும் அவளோடு வாழ்கின்றேன்” என்று குமார் ஒரு சொற்பொழிவு போன்று செய்து முடித்ததும் சுதனும், ரேகாவும் எழுந்து குமாரைப் பாராட்டினார்கள்.
“வார்த்தைகள் இல்லை. யு ஆர் ரியலி கிறேற். இன்று முதல் நாங்கள் சேர்ந்து பணியாற்றுவோம்” என்று சொல்லிக்கொண்டு மிகவும் ஆர்வத்துடன் அந்த அபூர்வ வீட்டைச் சுற்றிப் பார்க்க குமாரினைப் பின்தொடர்ந்தார்கள். குமாரின் விளக்கங்களுக்கிடையில் நீராவின் குரலும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

(யாவும் கற்பனை)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R