[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகிறோம். ஒரு பதிவுக்காக இங்கே விபரம் பதிவாகின்றது. - பதிவுகள் ]

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இலங்கையில்  நீண்ட கால  வரலாற்றைக்கொண்ட  தெல்லிப்பழை யூனியன்   கல்லூரிக்கு  தற்பொழுது  200 வயது.   அதனை  முன்னிட்டு உலகில்  பல  நாடுகளில்  வதியும்  கல்லூரியின்  பழைய  மாணவர்கள் ஒன்றுகூடி   தமது  கல்வி  வளர்ச்சிக்கு  வித்திட்ட  கல்விச்சாலைக்கு நன்றி   தெரிவிக்கும்  எண்ணத்துடனும்  அங்கு  பணியாற்றிய அதிபர்கள்,  ஆசிரியர்களின்  தன்னலம்  கருதாத  சேவை மனப்பான்மையை    நினைவு கூர்வதற்காகவும்  பழைய  மாணவர்  ஒன்றுகூடல்களையும்   பல்வேறு  நிகழ்ச்சிகளையும்  ஒழுங்கு செய்துவருகின்றனர்.

அந்த  வரிசையில்  அவுஸ்திரேலியாவில்  மெல்பன்  நகரில்  வதியும் யூனியன்    கல்லூரியின்  பழைய  மாணவர்கள்  ஒன்றுகூடும்  200  ஆவது   ஆண்டு  நிறைவு  விழா எதிர்வரும்  28  ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை   மாலை   4   மணிக்கு   பல்சுவை   கதம்ப நிகழ்ச்சிகளை   ஒழுங்கு  செய்துள்ளனர்.

மெல்பனில்   Dandenong Menzies  மண்டபத்தில் ( Menzies Avenue, Dandenong)   நடைபெறவுள்ள   இவ்விழா,  Athys  Jewellers - Perpetua Money Transfer, Prime Developers  ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன்  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில்   அவுஸ்திரேலியாவில்  வதியும்  கல்லூரியின்  முன்னாள் அதிபர்கள்   மற்றும்  ஆசிரியர்கள்  பாராட்டி  கௌரவிக்கப்படும் நிகழ்வும்   இருப்பதனால்  குறிப்பிட்ட  முன்னாள்  அதிபர்கள் ஆசிரியர்கள்    தாமதமின்றி  தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இலங்கையிலும்   வெளிநாடுகளிலும்  புகழ்பெற்ற  அப்சராஸ் மோகன்ராஜ்    இசைக்குழுவின்  நினைத்தாலே  இனிக்கும்  இசை நிகழ்ச்சியுடன்  பல  நாடுகளிலும்  மேடையேற்றப்பட்ட  கலைஞர் மாவை நித்தியானந்தன்  எழுதி,  இயக்கிய  முட்டை   என்னும் சிரிக்கவும்   சிந்திக்கவும்  தூண்டும்  நாடகம்  மெல்பன்  பிரபல SAPPHIRE   நடனக்குழு  வழங்கும்  நடனவிருந்து  உட்பட  பல  கதம்ப நிகழ்ச்சிகளும்  நடைபெறவுள்ளன.

அறுசுவை   உணவுடன்  பிரவேசக்கட்டணம் $  25.00   வெள்ளிகள் மட்டுமே.

இவ்விழாவில்   கலந்து  சிறப்பிக்குமாறு  கல்லூரியின்  முன்னாள் மாணவர்கள்,  மற்றும்  கல்லூரி  நலன்   விரும்பிகள்,   அன்பர்கள் அனைவரும்   அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக    விபரங்களுக்கு:
சிவநாதன் :- 0412 067 019
கே. எஸ். பகீரதன்:-  0403 476 856
நரேன்:- 0434 766 966 

தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R