நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.


ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக... குறிப்பு: நிகழ்விற்கு வரவிரும்பும் நண்பர்கள் முகநூலின் Event Invite இல் வருகிறேன் என்றோ அல்லது கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைத்தோ உங்களின் வருகையை பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பெருந்திரளான நண்பர்கள் வருவதால், பியூர் சினிமா அரங்கமே போதவில்லை. அதிகமான நண்பர்கள் வருகிறோம் என்பதை உறுதிப்படுத்தினால், மூன்றாவது மாடியில் இருக்கும் பெரிய அரங்கை முன்னமே தயார் செய்துவிடுவோம். அங்கே 300 நண்பர்கள் வரை அமரலாம். எனவே உங்கள் வருகையை உறுதிப்படுத்தினால் அனைவருக்கும் இருக்கையை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

வருகையை உறுதிப்படுத்த: 9566266036

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R