'வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை" ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்" தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது."

இவ்வாறு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்ää பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்களது கல்விச்சேவை மற்றும் பொதுப்பணிகளைப் பாராட்டிக் கௌரவித்த 'அமுதவிழா"வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தமிழர் கல்விநிலையத் தலைவர் திரு. எஸ். பகிரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வி. ரி. இளங்கோவன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் தாயகத்தில் முன்னணியில் திகழும் கல்லூரிகளில் பணியாற்றச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதனைத் துறந்து தான் நேசித்த பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி - சமூக முன்னேற்றத்தை மனதில்கொண்டு அப்பிரதேசங்களில் பணியாற்றி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். புலம்பெயர்ந்த மண்ணிலும் எம்மவரின் எந்த விழாவிலும் அவரது சிறப்புரை இடம்பெறுவதை எல்லோரும் அறிவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவையோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பேசும் ஆற்றலாளர். அவரது பணிகள் மேலும் தொடர நாம் என்றும் உறுதுணையாகவிருந்து ஒத்துழைப்பு நல்குவோம்" என்றார்.

விழா ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்ää எழுத்தாளர் 'ஓசை" மனோää எழுத்தாளர் சு. கருணாநிதிää திரு. யா. பாலகிருஸ்ணன்ää திருமதி லீனா ஜெயக்குமார்ää திரு. செ. பாஸ்கரன் உட்பட மற்றும் பலர் பாராட்டுரை வழங்கினர். நினைவுப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. பெருமளவான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எல்லோருக்கும் இரவு உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R