நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!2016 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தீபா தன்ராஜ்

ஐதிராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980'இல் பணி புரிந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். மிக முக்கியமான ஆவணப்படப் படைப்பாளிகளில் ஒருவர். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார், மற்றும் பயிற்சிக்கான திரைப்படங்கள் பல உருவாக்கியுள்ளார். விருது பெற்ற ஆவணப்படங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல தொடர் திரைப்படங்கள் இதில் அடங்கும். உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

1980 ஆண்டு முதல் பெண்களுக்கான இயக்கப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருபவர். கடந்த சில ஆண்டுகளாக; பெண்களின் நிலை, அரசியல் பங்கேற்பு, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த செயலமர்வுகள் (workshops), கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் குழுக்களில் பங்கு பெற்றுவருகிறார். தென் கிழக்கு ஆசிய பெண் செயற்பாட்டாளர்களுக்குக் ஒளிப்பதிவு கற்பித்துள்ளார். ஊடக கோட்பாட்டில் (Media Theory) ஈடுபாடு கொண்டவர்.  பல கல்லூரிகள் உட்படப் பல்வேறு மன்றங்களில் பல விரிவுரைகள் கொடுத்துள்ளார். 'சிறுபான்மை பெண்கள், குடியுரிமைக்காகப் பேச்சுவார்த்தை' [Minority Women Negotiating Citizenship] என்ற பல்-மைய ஆய்வின் முன்னணி ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். கல்வி தொடர்பான பிரச்சினைகளிலும் ஆர்வமுண்டு, முதல் தலைமுறையாகக் கற்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் குறிப்பாக அதிக ஆர்வம்.

தீபாவின் சில திரைப்படங்கள்,

'We're still working' (2013), 'Invoking Justice' (2011), 'Enough of this Silence' (2008), 'The Advocate' (2007), 'Nari Adalat' (2000),
'Itta Hejje Mundakka Thegiya Bediri Hindakka' (1995)- கிராம பஞ்சாயத்துகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்ட 12 தொடர் திரைப்படங்கள், 'The Legacy of Malthus' (1994), 'Something like a War' (1991), 'Kya Hua Iss Shehar Ko' (1986) மற்றும் 'Sudesha'(1983).

1980'களில் ஆரம்பத்தில் ஆவணப்படத் திரைப்படைப்பாளியாக உருவெடுத்த தீபா தன்ராஜ், அந்தக் காலத்தின் முக்கியப் பிரச்சனைகளைத் தனது திரைப்படங்களில் கையாண்டார். சமூகத்தில் உள்ள பெண்களின் போராட்டங்களை ஆவணப்படுத்த, அவரது நண்பர்களுடன் இணைந்து 'யுகாந்தர்' என்ற திரைப்படக் கூட்டு முயற்சி இயக்கத்தைத் துவங்கினார். அவரது அனைத்துத் திரைப்படங்களுமே தீவிரமான ஆராய்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை, திரைப்படங்களின் தரத்தில் இவை தெளிவாகப் பிரதிபலிக்கும். அவரது பெரும்பாலான திரைப்படங்கள், பெண்களின் போராட்டம் மற்றும் மற்ற பாலின பிரச்சனைகள் குறித்ததே ஆகும்.

தன்னுடைய ஆவணப்படங்களின் மூலம் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடும் தீபா தன்ராஜ்க்கு இந்த ஆண்டு லெனின் விருதை வழங்கி தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.

நண்பர்களும் தீபா தன்ராஜ்க்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் நல்ல சினிமாவுக்கும், படைப்புகள் மூலம் போராடும் கலைஞனுக்கும் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதை நண்பர்கள்தான் உணர்த்த வேண்டும். உங்களின் ஆயிரக்கணக்கான வாழ்த்துகள், இதனை உணர்த்த வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் மிக முக்கியமானவை.

விருது வழங்கும் நாள், இடம் நேரம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும்.


அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R