கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்
தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது
அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால்
நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம்
கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்
நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது
உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்
இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

பலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற
பக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ
குறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால்
அதுகூறும் அத்தனையும் அனைவருக்கும் பொருந்துவதே
நிலையான அத்தனையும் குலையாமல் கூறுவதால்
தலையாய நூலாகக் குறளொன்றே திகழ்கிறது
தொலைநோக்குப் பார்வையுடன் சொல்லிநிற்கும் கருத்தாலே
நிலையாக நிற்கும்குறள் நெஞ்ஞமெலாம் நிறைந்திருக்கு !

ஈரடியால் பலகருத்தை இலகுவாய் சொன்னகுறள்
எல்லோரின் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் இருக்குதன்றோ
பாரிலுள்ள பலபுலவர் பலகருத்தைப் பகர்ந்திடினும்
சீரான நூலாகத் திருக்குறளே திகழுதன்றோ
கார்கொண்ட மேகமெனக் கருத்துமழை பொழியும்குறள்
யார்மனதும் நோகாமல் நற்கருத்தைப் பாய்ச்சுதன்றோ
வேருக்கு   நீராக  வீரியமாய் நிற்கும்குறள்
பாருக்கு வந்ததனால் பயன்மிகுந்து  நிற்குதன்றோ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R