நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம்        16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர்  )  தலைமை வகித்தார்.

தி தமிழ் ஸ்டோரி “ ( The Tamil story) என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூலில் வவேசு அய்யர், புதுமைப்பித்தன், பாரதி முதற்கொண்டு 88 தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன் இதில் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்..” என்ற கதையும் இடம்பெற்றுள்ளது. மற்றும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சி.ஆர் ரவீந்திரன், சு. வேணுகோபால் ஆகியோரின் கதைகளும் இடம் பெற்றுள்ளன Tranquebar Press, NewDelhi வெளியிட்டுள்ளது. விலை ரூ 850 .

புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பழைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் எழுத்துப்பாணியையும் அறிந்து கொள்ள இத்தொகுப்பு பயன்படுவதாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.  சொக்கலிங்கனார் “ அறிவுத்தொழிலும், இலக்கியமும்  ‘ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Kanavu       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R