கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்!

- கற்சிலைமடு மாணவர்களுக்காக நூலகமொன்றினைச் சிறிய அளவில் ஆரம்பிக்க நண்பர் ஜெயக்குமரன் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார். அது பற்றி அவர் முகநூலில் இட்டிருந்த பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஆர்வம் உள்ளவர்கள் நூல்களை மேற்படி நூலகத்துக்கு அன்பளிப்புச்செய்து உதவலாம். நண்பரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். - பதிவுகள் -


கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்! -  ஜெயன் தேவா -

கற்சிலைமடுவின் குழந்தைகளுக்கு ஒரு சிறுவர்/குழந்தைகள் நூலகம் ஒன்றை சிறிய அளவிலேனும் அக்கிராமத்தில் உள்ள பெருந்தகையாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். ( ஒரு சிறு அறையேனும் தேவை.) வ.ந. கிரிதரனின் குடிவரவாளன் நாவலுடன் இந்நூலகத்தை ஆரம்பிக்க விரும்புகிறேன்.அன்பர்கள், எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு ஒரு நூலையேனும் இந்நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
]
தொடர்புகளுக்கு: திரு. தர்சன் (ஆசிரியர்) 0775305488


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R