எழுத்தாளர் குரு அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.

பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின்  அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.

சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி  எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R