கலாபூஷணம்  பீ.எம்.புன்னியாமீன்இலங்கையின்  பிரபல  எழுத்தாளரும்  கல்வியாளருமான  கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்  (10.03.2016 ) வியாழக்கிழமை  கண்டியில்  காலமானார். கடந்த  ஆண்டிறுதியில்  புனித உம்ராஹ்  கடமையை  நிறைவேற்றுவதற்காக  ஹஜ்  யாத்திரையை,  துணைவியார்  மஸீதா புன்னியாமீனுடன்  மேற்கொண்டிருந்த  இவர்,  புனிதக்கடமையை நிறைவுசெய்தபின்  நாடு  திரும்பும்  வேளையில்  29.12.2015    அன்று  திடீர் சுகவீனம்  காரணமாக  விமானத்திலிருந்து  இறக்கப்பட்டு  துபாய்  ராஷீட் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு  மாத  தீவிர  சிகிச்சைகளின்  பின்னர்  29.1.2016   அன்று   இலங்கை திரும்பிய  அவர்,  மேலதிக  வைத்தியத்துக்காக  மீண்டும்  பல்லேகல ஆயுர்வேத   வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு  நோயினால்  நீண்டகாலம்  பாதிக்கப்பட்டிருந்த  புன்னியாமீன், அதன்  தீவிர  பாதிப்பினால்  இறுதியில்  தாயக  மண்ணிலேயே எம்மை  விட்டுப்  பிரிந்தமை  அவரது  சுற்றுவட்டத்தினரை  கடும் துயரில்  ஆழ்த்தியுள்ளது.

ஆசிரியராகவும்,  சிறுகதை  எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும்,   ஊடகவியலாளராகவும்  பல்வேறு பரிமாணங்களிலும்  அறியப்பெற்ற  பீர்முகம்மது  புன்னியாமீன் 11.11.1960   இல் பிறந்தவர்.  கண்டி  மாவட்டத்தின்  கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில்  உள்ள  உடத்தலவின்ன  என்ற  சிற்றூரில்  பிறந்து, வளர்ந்து,   செழிப்புற  வாழ்ந்து  மறைந்தவர்.

அங்கு  அவர்  நிறுவிய  சிந்தனை வட்டம்  என்ற  அறிவுசார் நிறுவனத்தின்  மூலம்  பல  நூல்களை  எழுதியும்  பலரது  நூல்களை வெளியிட்டும்,  புலமைப்பரிசில்  பரீட்சை  சார்ந்த  பல  கல்விப் பணிகளையாற்றியும்  சிறப்புற்ற  அவர்,  உடத்தலவின்ன  என்ற சிற்றூரின்   பெயரை  உலகளாவிய ரீதியில்  பலரையும்  உச்சரிக்க வைத்ததுடன்,  ஈழத்து  இலக்கியத்  தோட்டத்திற்கு  மௌனமாகப் பொழிந்த  மாமழையாக  நின்று  பணியாற்றியவர்.

2004  முதல்  2009  வரை  இவர்  இலங்கை  முஸ்லிம்  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின்  விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக  எழுதித் தொகுத்து  15  தொகுதிகளில்  அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார்.   புகலிடப்  படைப்பாளிகளின்  வாழ்வும் பணிகளும் பற்றிய  தனியானதொரு  தொகுப்பை   வெளியிடும் நோக்கில்  லண்டன்  வந்திருந்த  புன்னியாமின்  ஒரு மாதம்  அளவில் எமதில்லத்தில்  தங்கியிருந்து  புகலிடப்  படைப்பாளிகளைச்  சந்தித்துத்  தகவல்  பெற்று  சிந்தனை  வட்டத்தின்  236 ஆவது  நூலாக அதனை  2006 இல்  வெளியிட்டிருந்தார்.

பேராதனைப்   பல்கலைக்கழகக்  கலைப்பட்டதாரியான  இவர், 162 சிறுகதைகளையும்  5000க்கும்  மேற்பட்ட  சமூக,  அறிவியல், இலக்கியப் படைப்புகளையும்   தமிழ்  உலகுக்குப்  புயலென வழங்கியவர்.   2010 இல்  சப்ரகமுவ  பல்கலைக்கழகத்தின்  தமிழ்த்துறை   சிறப்புக்கற்கைநெறி  மாணவி   எம்.ஐ.எப்.நபிலா   என்பவர்    இவரது  சிறுகதைகளைத்  தன்  பட்டத்  தேர்வுக்காக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.   புன்னியாமீனின்  நூல்களில் பெரும்பான்மையானவை   “நுலகம்”  இணையத்தில் இடம்பெற்றுள்ளன.    மேலும்   அவரது  படைப்புகள்  அனைத்தையும் பற்றிய   ஆவணங்களான  “நூல்தேட்டத்தில்  பீ.எம்.புன்னியாமீன்”, “நூல்தேட்டத்தில்  சிந்தனை   வட்டம்” ஆகிய  இரு  நூல்கள்  சிந்தனை   வட்ட  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

இணையத்  தளத்தின்  பாவனையைப்  பிற்காலத்தில்  தமிழ் மக்களிடையே   அறிமுகப்படுத்துவதில்  தீவிர  பங்காற்றிய  இவர் விக்கிபீடியாவில்   மாத்திரம்  7000  பதிவுகளுக்கு  மேல்  எழுதித் தரவேற்றம்   செய்தவர்.   இறுதிக்காலம்  வரை  தனக்கெனவொரு முகநூல்   வட்டத்தைக்  கொண்டியங்கியவர்.  அவரது இறுதிக்காலத்தில்  இம்முகநூல்  வழியாகவே   அவரது இறுதிக்காலத்து   வைத்தியசாலைச்  செய்திகள்,   புகைப்படங்கள், காணொளிகள்   என்பன  வெளியாகி  உலகின்  மூலை முடுக்குகளெல்லாம்   நண்பர்  புன்னியாமீனின்   உடல்நிலை  பற்றிய தகவல்களை   அறிந்துகொள்ளவும்   வழியமைந்தது.

இல்லற   வாழ்வில்  அவருடன்  இணைந்த  அவரது  துணைவியார் தனது   கணவரின்  இறுதிக்காலத்தில்,   அதீத  ஆளுமையுடன் செயற்பட்டு   துபாயிலிருந்து  ஒரு  மாதகாலம்  தனித்துப் போராடி,  தன் கணவர்  ஓரளவு  குணமான  நிலையில்   தாயகத்துக்கு  அவரைக் கொண்டுவந்து  சேர்த்து,  அன்புக்  கணவரின்  இறுதிக்  காலம்வரை மன   உறுதியுடன்  செயற்பட்டு  சத்தியவானின்  உயிரைக்காக்கப் போராடிய  “சாவித்திரியாக” எமது    மனங்களில்  அழியா இடம்பெற்றுக்கொண்டவர்.

மரணம்  என்பது  வாழ்வின்  முடிவல்ல.   புன்னியாமீன்  மரணத்தின் பின்பும்  எம்மிடையே  வாழ்வார்.   அவர்  விட்டுச்சென்றுள்ள  நூல்களே   அவரை  எம்முடன்  இணைத்துவைக்கும்.  அவரது  பிரிவில் கலங்கி நிற்கும்   அவரது   குடும்பத்தினருக்கு  ஆறுதல்  சொல்ல என்னிடம்  வார்த்தைகள் இல்லை. 

அனுப்பியவர்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R