சிட்னியில்    தவில் மேதை  யாழ்ப்பாணம்  தெட்சணாமூர்த்தி  ஆவணப் படம் -  புத்தக வெளியீடு பிரபல  ஆவணப்பட   இயக்குநர்   அம்சன்குமார்  இயக்கத்தில்   உருவான ஆவணப்பட  வெளியீடும்   தவில்  மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை  பதிப்பித்த  தவில் மேதை  லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம்  தெட்சணாமூர்த்தி புத்தக   வெளியீடும்  இணைந்த  நிகழ்வு சிட்னி  தூங்காபியில்  நடைபெறுகிறது.

25 மார்ச் 2016 (பெரிய வெள்ளி)
காலை  9:00 மணி முதல் 11:00 மணி வரை

தவில்  இசையில்  உலகின்  பேராற்றல்  என்று  புகழ்பெற்ற  அமரர் தட்சிணாமூர்த்தியின்  நினைவுகூரலில்  எங்களுடன்  இணைந்து கொள்ளுங்கள்.   உங்கள்  குடும்பத்தினர்  நண்பர்களையும்  அழைத்து வாருங்கள்.

இந்த  இறுவட்டு  மற்றும்  நூலின்  பிரதிகளை  மண்டபத்தில் பெற்றுக்கொள்ளலாம்.   இவற்றுக்காக  நீங்கள்  தரும்  அன்பளிப்புகள் தாயகத்தில்  மங்கள  இசை  வளர்க்க  அவர்  பெயரிலான  அறக்கட்டளை  எடுக்கும்  நன்முயற்சிகளுக்கு  உதவும்.

மேலதிக தகவல்களுக்கு:
திரு (0403 534 458)
கானா பிரபா   (0416 141 792)
ஜெகன் (0405 167 993)
தர்மா (0413 595 589)
பாலா (0404 404 777)

தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R