இந்தியச்  சிந்தனை மரபு  ஆசிரியர்,  கலாநிதி  நா.சுப்பிரமணியன் வழங்கும் கம்பராமாயணச் சிந்தனைகள் சொற்பொழிவு.

கலாநிதி நா. சுப்பிரமணியன்

இடம்: மெல்பன்   ஸ்ரீ சிவா விஷ்ணு  ஆலயம்  கலாசார மண்டபம். Boundary road, Carrum Downs
காலம் :  13-02-2016 சனிக்கிழமை  மாலை  4.00  மணி 

யாழ்.பல்கலைக்கழக  தமிழ்த்  துறையிலே  24  ஆண்டுகள்  பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற  கலாநிதி  நா.சுப்பிரமணியன்  அவர்கள்,  படிப்படியாக உயர்நிலைகளை   எய்தி  அத்துறையின்  தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும்   திகழ்ந்து,  2002  ஆம்  ஆண்டில்  ஓய்வு பெற்றுக்கொண்ட வர்.    இவர்    சிலகாலம்  தமிழகத்திலே  தங்கி  தற்பொழுது கனடா வாசியாவார்.

நால்வர்  வாழ்வும்  வாக்கும்,   கந்தபுராணம்  ஒரு  பண்பாட்டுக்களஞ்சியம், காலத்தின்  குரல்,    ஈழத்துத் தமிழ்  நாவல்  இலக்கியம்  உட்பட  சில நூல்களை     எழுதியிருக்கும்  கலாநிதி நா. சுப்பிரமணியன்  அவர்கள், தமிழக   அரசின்  விருது,   இலங்கை  தேசிய  சாகித்திய  விருது,  இலங்கை வடக்கு  - கிழக்கு  மாகாண  ஆளுநர்  விருது,   இந்திய  ஸ்டேட் பேங்  விருது தமிழகத்தின்   சேக்கிழார்  ஆராய்ச்சி  மன்றத்தின்  விருது  என்பனவற்றையும்  பெற்றவர்.

கலாநிதி நா. சுப்பிரமணியன்   அவர்களின்  அவுஸ்திரேலியா  வருகையின் நிமித்தம்   விக்டோரியா  இந்து  சங்கம்  ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்ச்சியில்   கலந்து  சிறப்பிக்குமாறு  அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R