- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும் புனித ஸ்தல மரமொன்றில்
கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்
வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை
பொய்ப்பித்தே வந்தன

சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்
நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்
நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா
ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்
அவை தினந்தோறும் வந்தன
மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்
அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

‘விதியில் எழுதப்பட்டவர்கள்,
சமுத்திரத்தில் வழி தவறி
திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்
முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’
என்றவர்கள் கூறியதை
நீ குறித்து வைத்துக் கொண்டாய்

தொலைதூரம் பறந்து சென்ற
வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை
ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்
அதன் நிறத்தை, வாசனையை
அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி
மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்
‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்
சிறிதும் கருணையேயற்று

ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி
பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்
அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு
கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்
நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்
ஈரத் துளி விழும் சப்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R