நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

குவிகம் இலக்கிய வாசல் புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.  அடியேனின் நேர் பக்கம் என்ற கட்டுரைத்தொகுதிதான் அது.  டிசம்பர் 19, 2015 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பனுவல் புத்தக மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தள்ளாத வயதிலும் அசோகமித்திரன் அவர்கள் என் புத்தகத்தைப் பற்றி சில வார்த்தை பேச உள்ளார். அதேபோல் ராஜாமணி, க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களும் பேச உள்ளார்கள். கூட்டம் ஏற்பாடு செய்துள்ள குவிகம் இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் என் புத்தகத்தைப் பற்றி எதாவது நாலுவார்த்தை நல்லபடியாக சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் தவறாமல் கலந்துகொண்டு தடபுடலாக கூட்டத்தை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இக் கூட்டத்தில் ஒருவர் கதையும், இன்னொருவர் கவிதையும் வாசிக்கிறார். இடம் : பனுவல் புத்தக நிலையம், 112 திருவள்ளுவர் சாலை,திருவான்மியூர், சென்னை 600 041.  திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில, பாம்பே டையிங் அருகில்.மாலை 6.30க்கு.

அனுப்பியவர்: லதா ராமகிருஷ்ணன்   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R