கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

பகலவனின் ஒளிக்கீற்றின் வெம்மையை தாங்கி

பொண்டாட்டி களத்துக்கு களம் போய்

பிச்சை எடுத்து வரும் நெல்மணியை

சாராய கடையில் விற்றுப்  போட்டு

சாராயம் குடிக்கும் குடிகார அப்பாக்கள் எத்தனை பேர்

பிள்ளைகள் கிழிந்த உடுப்புடுத்து

நாலு பேர் ஏழ்மையாய் சிரிக்க

தாங்க முடியாமல் வீட்டின் மூலையில்

இருந்து கொண்டு அழும் பிள்ளைகள் எத்தனை பேர்

 

தொட்டிலிலே பச்சிளம் குழந்தை பாலுக்கு அழ

புருசனை நம்பி பால்மா வேண்டி வா என்று.

காசி கொடுத்தால் சாராயக் கடையில்

மதுசாரம் ஊற்றும் அப்பாக்கள் எத்தனை பேர்

பொண்டாட்டி பிள்ளைகள்

நாளெல்லாம் பட்டினியாக் கிடந்தாலும்

பத்து ரூபாய் இருந்தாலும் பக்குவயமாய்

குடித்திடுவர் மதுசாரம் நம் அப்பாக்கள்

 

மதுசாரம் ஒழித்திடுவோம் மதுசாரம் ஒழித்திடுவோம்

ஊர் அதிர பறையடித்தாலும்

மறுநாள் காலையிலே.எதிர்ப்பக்கம்

மறு கடையும் திறந்திருக்கும்

குற்றங்களை சொல்லி! மேல் இடத்தில் முறையிட்டால்

முறையிட்ட மறு கனமே அவர் உயிர் போய் விடுமே.

இந்த நிலை தொடர்ந்தால் குடிகார அப்பாக்கள்

ஊரெல்லாம் குடியும் குடித்தனமும்

கும்மாளம்  தொடருமையா.....

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R