பாழ்நிலம் (1922)

"ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் 'ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?' என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: 'நான் சாக விரும்புகிறேன்'  என்பதாகும்." - கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு -

1. நீத்தாரைப் புதைத்தல்

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது.
வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை
ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது.
சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில்.
குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில்
பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன.
கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த
நாங்கள்
ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம்.
பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம்.
சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள்
நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு
'நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி'
பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில்
தங்கியிருந்தபோது  ஒரு 'ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில்
அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். 'மேரி,
மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்' என்றான் அவன்.
மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம்
இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.

இந்த வறண்ட கல்காட்டில் முளைத்துள்ள இவைகள் என்ன வேர்கள்?
இதில் வியாபித்துள்ள கிளைகள் யாது வகை? ஓ, மனுஷ்யபுத்திரனே,
உன்னால் இதை ஊகிக்கவோ உரைக்கவோ முடியாது.
உனக்குத் தெரிவதெல்லாம் சிதைந்த குவியல்கள் மட்டும்தான்.
கொளுத்தும் உஷ்ணத்தில் இம்மொட்டை மரங்கள் நிழல் தராது உனக்கு.
சிள்வண்டுகளின் ரீங்காரம் தொல்லைதரும் உபாதை
வறண்ட பாறையில் நீரோட்டமில்லை நிழலுக்கு ஒண்டிக்கொள்ள
ஒரே கதி இதோ, இந்த செம்பாறை மட்டும்தான்.
(வந்து, இந்த செம்ப்பாறை நிழலில் ஒண்டிக்கொள்')
உன்னைத் தொடரும் காலை நிழல் உன்னைச் சந்திக்க எழும் மாலை நிழல்
இவை இரண்டிலும் மாறுபட்ட வேறு ஒன்றைக் காட்டுவேன்.
ஒரு கைப்பிடித்த தூசியில் உன்னை பயமுறுத்த முடியும்.

தாயகத்திலிருந்து வீசும்
புதுக்காற்றே, நீ சொல்!
என் ஐரிஸ் காதலி எத்திசையில்
காத்திருக்கிறாள் எனக்காக?

'ஒரு வருஷத்துக்கு முந்திதான் நீ எனக்கு முதன் முதலாக ஹையஸிந்த் புஷ்பங்கள் தந்தாய்;
'என்னை எல்லோரும் ஹையஸிந்த்  சூடிய காதலி என்றனர்.'
எனினும் நாம் ஹையஸிந்த் தோட்டத்திலிருந்து தாமதமாய் திரும்பியபோது
பேசமறந்து ஊமையான நான் நாக்குழறி பார்வையற்றுப் போனேன்.
இருக்கிறேனா அல்லது இறந்துவிட்டேனா என்னால் உணரமுடியவில்லை ஏதும்
ஒளி புகுந்த நெஞ்சுக்குள் நீடித்த மெளனம்
ஏகாந்தமும் சூன்யமும்தான் இந்த ஆழ் சமுத்திரமோ?
சொஸாஸ்டரில் அம்மாள் கைதேர்ந்த குறிசொல்லி
ஐரோப்பாவிலேயே அதிபுத்திசாலியான
அவளுக்கு படுபயங்கர சளிசீக்கு
ஆருட கட்டுக்களுடன் இருந்தாள் இதோ உன் ராசி
ஜலத்தில் மூழ்கி மரித்த பொனீஷிய மாலுமி தானே
(அந்த முத்துக்கள் அவன் கண்களேதான், பார்)
இவள் பெல்டோனா பாறைகளின் ஸ்திரீ.
ஸந்தரப்பங்களின் நாயகி.
இவன் திரிசூலம் ஏந்தியவன் - இது ஶ்ரீசக்கரம்
இதிலிருப்பவன் ஒற்றைக்கண் வர்த்தகன் - இது வெற்றுச்சீட்டு
அதில் ஒருவன் ஏதோ முதுகில் சுமக்கிறான்
நான் அதை உற்று நோக்கக்கூடாது. சிலுவையில்தொங்கும் மனிதனை காணோம்.
உனக்கு ஜலத்தில் கண்டமுண்டு. ஜாக்கிரதை
பார்,அந்த வட்டமான இடத்தைச் சுற்றி ஒரே ஜனநெரிசல்
நன்றி. அன்பான திருமதி எகிடோன் வசம்
அவள் ஜாதகத்தை நானே நேரில் கொணர்வதாக சொல்.
இது கலியுகம். உஷாராக போய் வா.

மாயப்பட்டணமே,
ஒரு குளிர்கால விடியலில் மங்கிய மூடுபனியில்
லண்டன் பாலத்தில் ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.
இத்தனை பேரையுமா கொள்ளை நோய் கொண்டு போனது.
இடைவிடாத ஏக்கப் பெருமூச்சில் ஒவ்வொருவர்
விழிகளும் பாதத்தையே குத்திட்டு நடைபோட்டன.
குன்றில் ஏறி பள்ளமான வில்லியம் மன்னன் வீதியை வேகமாக கடந்தனர்.
அருகிலிருந்த புனித உல்நாத் மாதாகோயில் கடிகாரம் சாவு நேரம் மணி ஒன்பதை அலறியது.
ஆவிக் கும்பல் போலிருந்த அதிலொருவனை எனக்கு
ஏற்கனவே தெரிந்திருந்தால் கூவி நிறுத்தினேன்: 'ஸ்டெட்ஸன்!
மைலாயுத்தத்தில் என்னுடன் கப்பலில் இருந்தாய் அல்லவா!
போனவருஷம் உன் தோட்டத்தில் நீ புதைத்த பிரேதம் துளிர்த்துள்ளதா?
இவ்வாண்டு பூத்துக் குலுங்குமா'
ஒருவேளை உறைபனியில் முளைக்காமல் கருகி விட்டதா?
ஓ, நாயை மட்டும் நெருங்கவிடாதே, அது மனிதனுக்கு தோழன்
மேலும் அது நகத்தால் சடலத்தை தோண்டிவிடும்!
ஏய், கபடவாசியே, என்சகப்பிரஜையே, என் உடன்பிறப்பே!'

[அடுத்த அத்தியாயம்: இன்னும் தொடரும் ; பதிவுகள் - சதுரங்க விளையாட்டு. ]

நன்றி:  டி.எஸ்.எலியட்டின் 'பாழ்நிலம்' [தமிழில்: வர்த்தமான மகாவீரன்]


THE WASTE LAND
By T. S. Eliot
 
"Nam Sibyllam quidem Cumis ego ipse oculis meis
 vidi in ampulla pendere, et cum illi pueri dicerent:
 Sibylla ti theleis; respondebat illa: apothanein thelo."

I. THE BURIAL OF THE DEAD

  April is the cruellest month, breeding
  Lilacs out of the dead land, mixing
  Memory and desire, stirring
  Dull roots with spring rain.
  Winter kept us warm, covering
  Earth in forgetful snow, feeding
  A little life with dried tubers.
  Summer surprised us, coming over the Starnbergersee
  With a shower of rain; we stopped in the colonnade,
  And went on in sunlight, into the Hofgarten,                            10
  And drank coffee, and talked for an hour.
  Bin gar keine Russin, stamm' aus Litauen, echt deutsch.
  And when we were children, staying at the archduke's,
  My cousin's, he took me out on a sled,
  And I was frightened. He said, Marie,
  Marie, hold on tight. And down we went.
  In the mountains, there you feel free.
  I read, much of the night, and go south in the winter.

  What are the roots that clutch, what branches grow
  Out of this stony rubbish? Son of man,                                  20
  You cannot say, or guess, for you know only
  A heap of broken images, where the sun beats,
  And the dead tree gives no shelter, the cricket no relief,
  And the dry stone no sound of water. Only
  There is shadow under this red rock,
  (Come in under the shadow of this red rock),
  And I will show you something different from either
  Your shadow at morning striding behind you
  Or your shadow at evening rising to meet you;
  I will show you fear in a handful of dust.                              30
       Frisch weht der Wind
       Der Heimat zu
       Mein Irisch Kind,
       Wo weilest du?
  "You gave me hyacinths first a year ago;
  "They called me the hyacinth girl."
  —Yet when we came back, late, from the Hyacinth garden,
  Your arms full, and your hair wet, I could not
  Speak, and my eyes failed, I was neither
  Living nor dead, and I knew nothing,                                    40
  Looking into the heart of light, the silence.
  Od' und leer das Meer.

  Madame Sosostris, famous clairvoyante,
  Had a bad cold, nevertheless
  Is known to be the wisest woman in Europe,
  With a wicked pack of cards. Here, said she,
  Is your card, the drowned Phoenician Sailor,
  (Those are pearls that were his eyes. Look!)
  Here is Belladonna, the Lady of the Rocks,
  The lady of situations.                                                 50
  Here is the man with three staves, and here the Wheel,
  And here is the one-eyed merchant, and this card,
  Which is blank, is something he carries on his back,
  Which I am forbidden to see. I do not find
  The Hanged Man. Fear death by water.
  I see crowds of people, walking round in a ring.
  Thank you. If you see dear Mrs. Equitone,
  Tell her I bring the horoscope myself:
  One must be so careful these days.

  Unreal City,                                                            60
  Under the brown fog of a winter dawn,
  A crowd flowed over London Bridge, so many,
  I had not thought death had undone so many.
  Sighs, short and infrequent, were exhaled,
  And each man fixed his eyes before his feet.
  Flowed up the hill and down King William Street,
  To where Saint Mary Woolnoth kept the hours
  With a dead sound on the final stroke of nine.
  There I saw one I knew, and stopped him, crying "Stetson!
  "You who were with me in the ships at Mylae!                            70
  "That corpse you planted last year in your garden,
  "Has it begun to sprout? Will it bloom this year?
  "Or has the sudden frost disturbed its bed?

  "Oh keep the Dog far hence, that's friend to men,
  "Or with his nails he'll dig it up again!
  "You! hypocrite lecteur!— mon semblable,— mon frere!"


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R