- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை )

1. புதிய சட்டங்கள்!

வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்...
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

 போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!

தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?

பதுங்குக் குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!

புருஷனையும்
புள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்...
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்...

வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்...

சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்??? 

 

2. புயலாடும் பெண்மை !

பெண்ணே!
நீ பாவலர் போற்றும்
மென்மையானவள் தான்!
ஆனால்
அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும்
ஆடவர் மத்தியில்
அடல் சான்ற
வன்மையானவள்!
பணிவும் பரிவும்
பாவையர்க்கு
அழகானவை தாம்!
ஆனால்
அரிவையர்க்கெதிராக
அநீதி தலையெடுக்கும் போது
பணிந்து போகாமல்
துணிந்து நில்!
திண்மை நெஞ்சோடு
தொடர்நது செல்!

பூங்கொடியே!
நீ மலருக்கு உவமிக்கப்பட்ட
மங்கை தான்!
ஆனால் தீங்கினைக் கண்டால்
முள்ளாகத் தீண்டவும்
தயங்காதே!
மாதரசே!
நீ மந்தமாருதம் தான்!
பெண்மைக்கு ஊறு வந்தால்
புயலாக மாறி விடு!!!
புயலாடும் பெண்மை !
 
  
பெண்ணே!
நீ பாவலர் போற்றும்
மென்மையானவள் தான்!
ஆனால்
அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும்
ஆடவர் மத்தியில்
அடல் சான்ற
வன்மையானவள்!
பணிவும் பரிவும்
பாவையர்க்கு
அழகானவை தாம்!
ஆனால்
அரிவையர்க்கெதிராக
அநீதி தலையெடுக்கும் போது
பணிந்து போகாமல்
துணிந்து நில்!
திண்மை நெஞ்சோடு
தொடர்நது செல்!

பூங்கொடியே!
நீ மலருக்கு உவமிக்கப்பட்ட
மங்கை தான்!
ஆனால் தீங்கினைக் கண்டால்
முள்ளாகத் தீண்டவும்
தயங்காதே!
மாதரசே!
நீ மந்தமாருதம் தான்!
பெண்மைக்கு ஊறு வந்தால்
புயலாக மாறி விடு!!!

www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com
www.bestqueen12.blogspot.com
http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q
http://udaru.blogdrive.com/archive/597.html
http://www.geotamil.com/pathivukal/NIZHALVUKAL_MKM_ON_RIMSA.htm
http://suvaithacinema.blogspot.com/2010/02/blog-post_27.html
http://www.muthukamalam.com/muthukamalam_padaipalarkal%20rimza.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D#.E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF_.E0.AE.87.E0.AE.A3.E0.AF.88.E0.AE


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R