குமரி நீலகண்டன்அவளின்  

இடையினைப் பிடித்து

குடையினுள் இழுத்தான்

இடை விடாத மழை....

 

*முற்றத்தில் போட்ட

கோலங்களையெல்லாம்

மழை அழித்து விட்டது..

அடுத்த நாள்

மழை விட்ட பின்

மழையின் கோலம்

தெருவெங்கும்   

 

 

 

நிலத்தின் ஆழத்திலிருந்து
மண்ணானது மழைக்காய்
காங்கிரீட் கதவைத்
தட்டி அழைக்கிறது..
நீர்கத்தியால்
நிலத்தைக் குத்தி
இறங்கப் பார்க்கிறது
நிலத்தில் மழை.
வலுவற்ற மழை
வழுக்கி விழுகிறது
கடலில்...

 

கொடியில் துவைத்து

காயப் போட்ட

என் ஆடைகளையெல்லாம்

என் அனுமதியின்றி

அணிந்து காற்றில்

ஆட்டம் போட்டு

காட்டுக் கத்தலுடன்

மண்ணில் புரண்டு

விளையாடிப்

புழுதியாக்கிச் சென்றது

மழை.

 

*தெருக் கூட்டுபவள்

வேலைக்குச் செல்ல

இயலவில்லையென

மழையைத் திட்டிக்

கொண்டிருந்தாள்.

அவளை கண்காணிக்கும்

பணியாளன் வேலைக்கு

வரவில்லையென

அவளைத் திட்டிக்

கொண்டிருந்தான்.

சில மணி நேரங்களில் மழை

தெருவை அழகாய்

சுத்தம் செய்திருந்தது.

 

*வழக்கம் போல்

பக்கத்து வீட்டில்

அவன் பாடிக்

கொண்டே இருந்தான்

அவனுள் ஏற்றிய

தண்ணீரின் குறிப்புக்களுடன்.

வெளியே மழையும்

தரையில் தனித்

தாள ஆவர்த்தனத்துடன்

பாடிக் கொண்டே

இருந்தது தண்ணீரில்

இசைக் குறிப்புகளோடு.

நான் யாருடையப்

பாட்டைக் கேட்பது?

  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R