தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்- மே 8, 2012   - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன்  தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”

சிறீலங்காவில் நீதியும் சமத்துவமுமுடைய சமாதானத்திற்கான எமது போராட்டத்திற்குத் தோழர் றோய் அவர்கள் பெரும் ஆதரவாளராக விளங்கினார். ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு, தென் ஆபிரிக்காவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தான் பெற்ற அனுபவங்கள,; விளக்கங்கள் ஆகியன பற்றியும் உண்மை, மீளிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எம்முடன் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் றோய் படையாட்சி அவர்கள் உலகத் தமிழர் பேரவைக்கு வழங்கிய ஆதரவையிட்டு நாம் உண்மையிலேயே பெருமிதமடைவதோடு அவருக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவும் உள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவிற் கலங்து கொள்வதற்கு எமக்கு அழைப்பு விட்டமையிட்டுத் தனிப் பெருமையடைகின்றோம்.

தோழர் றோய் படையாட்சி அவர்கள் ஒரு தலை சிறந்த மனிதர் மட்டுமல்லாது அவர் ஒரு கடும் உழைப்புடைய சமூக சேவகர், தன்னலமற்ற மனிதாபிமான ஆர்வலர், விடுதலைப் போராளி, வறியோருக்காக பாடுபட்டவர் என்பதையெல்லாமிட்டுப் பெருமையடைதல் அவரது மறைவால் ஆற்றொணாத் துயரில் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுக்குமென நம்புகின்றோம். உலகத் தமிமர் பேரவை, சிறீலங்கா வாழ் தமிழர்கள், உலகளாவிய தமிழ் மக்கள் ஆகிய அனைவரினதும் போற்றுதற்குரிய நண்பனாக விளங்கிய அன்னாரின் பிரிவு ஈடு செய்ய முடியாதது.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் என்ற முறையிலும் அன்னாரின் நண்பன் என்ற முறையிலும் அவரின் ஆன்மா என்றும் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

வண. முனைவர் எஸ். ஜே. இமானுவல்
தலைவர், உலகத் தமிழர் பேரவை

ஊடகத் தொடர்பு:  சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 10 44 (0) 7958 590 196
மின்னஞ்சல்: ;: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Skype: surendirans

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R