- தம்பா (நோர்வே) -அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.

பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.

குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

"ஆமை ஓட்டுக்குள்
தலையையும் உடலையும்
இழுத்துக் கொள்வதுபோல்
பதுங்கிய பங்கர் வாழ்க்கையில்
அப்பனும் உழைத்ததில்லை
பாட்டனை உழைக்க விட்டதுமில்லை.
தசாப்தங்களாகக் குத்தவைத்து
சோறுபோட்ட யுத்தம் இது.

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல் காரனென
ஊரும் சனமும்
சபித்துப் போகட்டும்,
சீமைக்குச் சென்றவனெல்லாம்
சீர்வரிசை செய்கிறான் சின்னவனுக்கு.
எனைச் சீராட்டி பாராட்ட
எவன் எடுப்பான் தத்து?"

பகைவர்கள் வென்ற தேசங்களில்
ஓலங்கள் மட்டுமே
மந்திரங்களின் மதிப்பைப் பெறுகின்றன.

அவனோ இவனோ
எதிரியை எதிர்த்த வீரனுமல்லன்,
தர்மத்தை தருவிக்கின்ற தர்மவானுமல்லன்.
உணர்வின் எதிர்ப்பை
ஏலத்தில் ஏய்க்கின்ற
ஏகபோக எஜமானர்கள் ஆனார்கள்.

வன்மத்தை விதைத்த
மலட்டு நிலத்தில்
நச்சுக் காளான்கள்
அமோக விளைச்சலைத் தருகின்றன.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R