நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் கலை இலக்கிய இதழின் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு பகிர்வு இலக்கிய அமைப்பினால் எதிர்வரும் சனிக்கிழமை (03-12-2016) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை உட்துறை முக வீதியில் அமைந்துள்ள TDDA மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது. ஆய்வாளரும் பிரபல ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரபல நாவலாசிரியர் க.அருள் சுப்பிரமணியம் பிரதம அதிதியாகவும் பிரபல எழுத்தாளர் திரு. அ.ஜெயராஜா சிறப்பதிதி யாகவும் கலந்து கொள்கின்றனர். வரவேற்பை பகிர்வு செயற்பாட்டாளர் திரு. வ.தர்ம பாலனும் வெளியீட்டுரையினை மலை முரசு ஆசிரியர் மாயன் சிறி ஞானேஸ்வரனும் " ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் மகுடம் " என்ற தலைப்பில் ஆய்வுரையை கவிஞர் தில்லை நாதன் பவித்திரனும் நிகழ்த்தவுள்னர். மலரின் முதல் பிரதியை கனடா திரு.எஸ்.லிங்கேஸ்வரன் பெற்றுக்கொள்ள நன்றியுரையை மகுடம் ஆசிரியர் மகுடம் வி.மைக்கல் கொலின் ஆற்றுவார். திருமலை வாழ் கலை இலக்கிய நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்

 

 


மகுடம் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு விழா!

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R