கவிதை வாசிப்போமா?

1. கவிதை எழுத ஆசை.

எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?

வரும், நிச்சயம்
வரும்.

2. நட்பு  -

மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.

3. இனிக்கும் அதிகாலைகள்

மார்கழி விடிகாலை! ,
பிள்ளையார் கோவில்
பஜனைக்குழு!

அதிகாலையில் குளிரக் குளிர
தலையில் தண்ணீர் ஊற்றிக்
குளித்து , அவசரமாய்க்'
கோயிலுக்கு ஓடுவது
இன்னும் இனிக்கிறது.

திருவெம்பாவை நோன்புக்காய்த்
திருப்பள்ளியெழுச்சி
பாடியதெல்லாம்
பசுமையாக நினைவுகளில்
படம் விரிக்கின்றன.

இனிக்கும் அதிகாலைகள்
அவை.
இதயத்தின் ஆழத்தே
இன்னும் பசுமையாய்
இருக்கின்றன.


4. கவிதை: காக்கைச்சிறகினிலே நந்தலாலா!

காலையில் கீச்சுக் கீச்சென்று
ஒரே சத்தம்.
ஓ! என் அன்புக்
குருவிகளின் அழைப்பு.
ஒரு பிடி அரிசியைப் போடுகையில்
ஏதோ
ஓர் உவகை.

மதியம் சமைக்கும் போதொரு காக்கை
பின் கதவிலமர்ந்து,
சற்றே தலையைச்சாய்த்து,
உள்ளே எட்டி காக்கா எனும் போது
உணவளிக்கையில் பொங்கும் நெகிழ்ச்சி

காக்கை!
காக்கை சிறகினிலே நந்தலாலா என்று
பாடி பாரதியின் சிகரத்தை எட்டிப்
பார்க்கையில்
கண்கள் கண்ணீரைப்
பொழிகின்றன.

5. நான்!

ஆடினேன் பாடினேன்
ஆனந்தக்கூத்தாடினேன்.............

செடி கொடியிடம்
சென்று சொந்தம்
கொண்டாடினேன்.....

எல்லாம் தானே இயங்கின.
என்னையே விழுங்கினேன் .
என்னையே தேடினேன்.

எங்கே நான்?

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R