கவிதை வாசிப்போம் வாருங்கள்!

கடற்கரை மணலில்

கைகளைக் கோர்த்து

கால்புதைய நடப்பதல்ல

காதல்!

நெடிதுயர்ந்த

மரங்கள் அடர்ந்த

பூங்காக்களில்

புதர்களின் ஓரம்

புகலிடம் தேடுவதும் - அல்ல

காதல்!

 

வாழ்க்கை வரலாற்றை

பக்கங்களில்

பதிவு செய்து

புத்தகமாய் வெளியிட

பதிப்பகங்கள்

கிட்டாத காரணத்தால்

உடல் முழுதும்

வரிகளை வரைந்து நிற்கும்

தள்ளாத வயதிலும்

தணியாமல் இருப்பது

காதல்!

நாணல் புல்லாய் - நின்று

உழைத்த உடல் - இன்று

நாண் ஏற்றிய வில்லாய்

வளைந்து நிற்கும்

வயதிலும்

வளையாமல்

வளைய வருவது

காதல்!

 

மருத்துவமனைகளின்

அவசர ஊர்திகளிலும்

அமரர் ஊர்திகளிலும் - தம்

துணையோடு தவித்திருக்கும்

கண்களில் பளிச்சிடுவது

காதல்!

தம் வாழ்க்கையின்

சக்கரமாய் இருந்தவளை - இன்று

சக்கர நாற்காலியில்

தாங்கி நிற்கும் கைகளில்

தேங்கி நிற்பது

காதல்!

 

அறுவை அரங்கிற்குள்

அரைமயக்கத்தில்

அனுப்பிவிட்டு

அரைநொடியும்

அமர இயலாமல்

அங்குமிங்கும்

அலைபாயும் கால்களிலும்

தெரிகின்றது

அமரத்துவ காதல்!

இந்தக் காதல்

காதலர் தினமென்ற

ஒற்றை நாளில்

ஒடுங்கிவிடும் காதல் அல்ல -

மாறாக

ஒவ்வொரு தினத்திலும்

ஓங்கி ஒலிக்கின்ற காதல்!

 

அன்றிலையும் மகன்றிலையும்

என்றும் நான் கண்டதில்லை!

அரைநூற்றாண்டுக்கும்

அதிகமாக

குறைகளைப் புறந்தள்ளி

நிறைகளை முன்னிறுத்தி

பிறைபல கண்ட

எத்தனையோ

காவியக் காதலர்களே

எம் கண்ணிற்கு

என்றைக்கும்

அன்றிலும் மகன்றிலும்!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R