கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!

1. நல்லோர்க்கே சொர்க்கம்....!

வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில்
வாழும் முறையோ பெரிதாகும்
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய
இஸ்லாம் தந்த நெறியாகும்....!

குடிசை வாழும் ஏழைகளும் - பெருங்
கோடி சீமான் "ஹாஜி"களும்
முடிவில் சமமாய் மண் மீது - நபி
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!

போட்டி பொறாமை புகு நெஞ்சம் - பெரும்
பொல்லாப் பழிகள் உறை மஞ்சம்
"ஷைத்தான்கள்" - உடன்
அகற்றி வாழல் அறமாகும்.....!

பெண்ணே வாழ்வின் கண்ணாகும் - அவள்
பெருமையின் அளவோ விண்ணாகும்
இன்னல் தன்னை அவர்க் கூட்டல் - உயர்
இஸ்லாத்திற்கே முரணாகும்.....!

ஏழைப் பெண்ணைக் கரம்பிடிப்போன் - தூய
இறையோன் கருணைதனைப் பெறுவான்
நாளும் பொழுதும் அன்புடனே வாழும்
நல்லோர்க் கென்றும் சுவர்க்கம் மெய்......!

2. மானுடப் பிறவி

மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்....!

இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்.....!

தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வனப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்....!

குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய்
அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம்
ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்....!

முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்.....!

3. முடிவினி மரணம் ....!

துள்ளினேன் இளமை வாழ்வில்,
துயரினைத் தூர விட்டேன்
பள்ளியில் படித்த பின்னே
பதவியும் வந்த தாலே
கொள்ளையாய் இன்பந் தேடி
குவலயம் தனில் - அலைந்தேன்.
உள்ளத்தே கோடி ஆசை
உதித்தது செயலில் செய்தேன்.......!

ஆடினேன் அரங்கில் - புகழை
அங்கும் யான் தேடிக் கொண்டேன்,
சூடினேன் வெற்றி வாகை
"கலை" யென வாழ்வைக் கொண்டேன்
தேடினேன் செல்வம் கோடி
திருப்தியோ; எனக்கு இல்லை
நாடினார் பல்லோர் என்னை
நாடினேன் இன்பம் தன்னை......!

வதுவையும் செய்தேன் வாழ்வில்
வரமெனக் குழந்தை பெற்றேன்
மதுவினைக் கூடத் தொட்டேன்
மங்கையைத் தேடிச் சென்றேன்,
எதுவுமே விட்டேன் என்று
எண்ணுதற் இல்லை இன்றோ,
முதுமையில் நோயில் வீழ்ந்தேன்
முடிவினி மரணம் தானே......!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R