கவிதை: இரவு!

இரவு அழகானதுதான்
நிம்மதியாய் தூங்குகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
தாயின் அன்பை புசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவுகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
மனைவியின் அழகை ருசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
வான் நிலவை ரசித்து பார்ப்பவனுக்கு

நடு நிசியில் கண் விழித்து
நாய் குரைக்க பரிதவித்து
கோடிக்குள்ளால் ஓடி
பற்றைகளுக்குள் நின்று
பாம்புக்கும் பல்லிக்கும் பயந்து
விடியும் வரை தூங்காமல்
விழித்திருந்த இரவுகளை எப்படி அழகென்பேன் ?

ஏச்செஞ்சியிடம் காசு கட்டி
ஏமாந்து மொஸ்கோவில்
ஏமாளியாய் முகட்டை பார்த்தபடி
ஏக்கமுடன் விழித்த இரவுகளை
எப்படி அழகென்பேன்

தூக்கம் கெட்டு உழைத்து
துண்டு துண்டாய் சீட்டுக் கட்டி
ஆண்டு இரண்டு கழிச்சு
களிவில்லாமல் சீட்டெடுக்க ...
தாச்சிகாரன் கனடாவில் நின்றால்
அந்த இரவை எப்படி அழகென்பேன்

நட்பாகி காதல் அரும்பாகி
கொப்பாகி பூத்து குலுங்கையிலே - புரிதல்
தப்பாகி பிரிதல் வந்து
அப்பாவியாக நானிருந்த 
அந்த இரவை எப்படி அழகென்பேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.          


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R