சு. குணேஸ்வரன் காலநீட்சியின் பின்
எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது.

மூத்தோருக்கும்
காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும்
மற்றோருக்கும்
இயலாதபோது கைகொடுக்கும்
ஊன்றுகோல் அல்ல இது.

உடையாருக்கு குடை பிடிக்கவும்
பக்கப்பாட்டுப் பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல்.
இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். 

திண்ணையில் கதையளக்கும்போதும்
அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும்.
ஊன்றுகோல் பற்றியே இனி கனவுகாணவேண்டும்.
நடக்கும்போது சேறுபடாமல் பார்த்துக்கொள்ளவும்,
மிகப் பவித்திரமாக…
குளிக்கும்போது அதற்கும் ஒரு நீராட்டு செய்யவும்
சிந்திக்கவேண்டும்.
உக்கிப்போகாதபடி வர்ணம் பூசவும்
வெள்ளி முலாமிட்ட கிரீடம் ஒன்றினை
அதற்குச் சூட்டிக்கொள்ளவும்
ஒருவரின் உதவியை நாடவேண்டும்.

சமையற்கட்டில்
வேலைத்தளத்தில்
வாசிகசாலையில் 
கோயிற் திருவிழாவில்
இன்னும் பொதுமேடைகளில்
எனக்குக் கிடைத்த ஊன்றுகோல் பற்றியே
இனிப் புகழ்ந்து பேசவேண்டும்.

காலநீட்சியின்பின்
கிடைத்த ஊன்றுகோல் இது.
நன்றாகப் பற்றிக்கொள்ளவும்
இரவல் கொடுத்திடாது காத்துக்கொள்ளவும்
என்னைப் பழக்கப்படுத்தவேண்டும்.

10/2014

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R