ஜூன் 2013 கவிதைகள் -2

சங்கதியை நீ அறியாயோ?

-  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -

தாய்க் குலமே  நீயின்று
தனித் துவத்தை இழந்ததுமேன்?
ஆய் விங்கே நடத்தவில்லை
ஆனாலும் உன்நிலை கண்டதினால்
பாய்ந்து வரும் வேதனையை
பகிர்ந்திடவே நான் முயன்றேன்
தேய்ந்து வருமுன் நிலைபற்றித்
துளியேனும் நீ சிந்தித்தாயா?

ஒரு காலம் கல்வியறிவில்
உனக்கக்கறை அவ்வளவாய்
பெருகி வரவில்லை யெனினும்
பெருமித மடைகிறேன் நீயின்று
அறிவென்ன!ஆய கலைகளென்ன!
அனைத்திலுமே ஆண்களுடன்
சரி நிகராய் முன்னேறும்
சாதூரியம் பெற்றுவிட்டாய்.

உயர் கல்வி கற்பதுவும்
உத்தியோகம் பார்ப்பதுவும்
பயன் நல்கும்.என்றாலும்
பொறுப்புள்ள தாயாய் நிதம்
நயங் கொண்டே இயங்குவதில்
நீ காட்டும் ஆர்வத்தால்
பயன் அதிகம் இல்லையென்ற
புதிர் உனக்கும் புரியவில்லையா?

இன்று பல வாலிபர்கள்
ஏன்? வாலைக்குமரிகளும்
பண்பாடு கலாச்சாரம்
புனித முறும் ஒழுக்க நலன்
என்னவென்று தெரியாது
அகம் போன போக்கினிலே
சென்று கொண்டே இருக்கின்ற
சங்கதியை நீ அறியாயோ?

தான் பிறந்த தாய் நாடே
தனக்கென்றும் பொன் நாடாம்
வான் முகட்டில் வாழ்ந்தாலும்
விண் வெளியில் ஊர்ந்தாலும்
மேன்மையுறத் தன் நாட்டின்
மேன்மைக்காய் ஒவ்வொரு
ஆண் மகனும் பெண்மணியும்
அரும்பணி புரிதல் கடமையே!

இன்றேனோ  அநேகரிடம்
இல்லையன்றோ இப்பண்பு
நன்கிதனை ஆய்ந் திட்டால்
நிச்சியமாய் உன் தவறே
மன்னிப்பாய் மாதாவே!
மதலைக்கு நீயூட்டும் பாலோடு
அன்பகிம்சை நாற்றுப்பற்று
அழுதா நீ ஊட்டினையோ?

மறந்து விட்டேன் 'மகராசி'
மேனியழகு கெடுமென்று
வெறும் புட்டிப் பாலையன்றே
விரும்பி நீயும் ஊட்டுகிறாய்.
பெருகி வரும் தாய்ப் பாசம்
புனித முறும் தேசப்பற்று
அருகி வரும் காரணமே
இன்னும் புரியவில்லையா?

கற்றாய்ந்து நன் முறையில்
கடமைகளைச் செய்யாது
பெற்றோரையும் மதியாது
பெரியோரையும் மதியாது
கற்பிக்கும் ஆசானையும் மதியாது
கடும் போராளிகள் போல
பற்பல இளைஞர் யுவதிகளும்
பாவிகளாகி அலைகின்றார்.

சோலைக் கிளி ஆனபல
சுதந்திரத் தாய்மாரின்
வேலைக்காரப் பெண்களின்
வீட்டு ஆயாமார்களின்
சோலைத்தலைப்பில் வளர்கின்ற
சேய்களுக் கெங்கே தாயன்பு?
ஆல் போல் வளர்ந்து நித்தம்
ஆர்க்கப் போதிய வாய்ப்புண்டு.

வரலாறு படைத்த பல
வீர மணித் தாய்மார்கள்
சரித்திரமே அன்னார்கள்
சமூகம் நாடு உயர்வடைய
அரும் பணிகள் புரிந்ததனை
அழகாகச் சொல்லுவதைத்
தெரியவில்லை யெனில் மீண்டும்
தெளிவாகப் பயின்றிடுவாய்.

இந் நிலை நீடித்தால்
எதிர் காலம் நிலையற்று
அந்த ரத்தில் வாழுகின்ற
அவல நிலை நிச்சியமாய்
வந் தெங்கள் அனைவரையும்
வாட்டி விடும் அறிவாயோ!
நொந் துள்ளம் தளராதே
நெஞ் சுறுதி பூண்டிருவாய்!

அடங் காத காளையர்கள்
அறம் மதியா வாலிபர்கள்
மடம் போன கன்னியர்கள்
மாற்றானின் நாகரிகம் தத்துவங்கள்
உடன் கொண்டு-நன்னெறிகள்
உதா சீனம் செய்தந்தோ
தடம் புரளும் இளஞர்கள்
திருந்த வழிசெய்தல் உன்கடனே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஆசைக்கடல்              

 வேலணையூர் -தாஸ்

உன் விழி வழி வழிகிற  ஆசை அழைக்கிறது.
அந்த அறை முழுவதும் நிரம்பியிருக்கிறது
நமது காதல்
காம பனியாகிப் பொழிகிறாய்
காதல் நீராய் உருகுகிறாய் -------
அமுத கடலில் துளிநீர் அருந்தி வியர்க்கிறேன்.
அள்ள அள்ள கடெலன விரிகிறது காமம்.
முத்தங்களால் தீமுட்டுகிறாய்
விழிகள் சொருகி உதடுகள் கடித்து உறைகிறாய்.
காதருகே சுருளும் ஒற்றை முடியில்
ஒளிக்கிறது உயிர்.......

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R