ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

என்ன தேசமோ

ப. மதியழகன்உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள் 
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்

 உங்களுக்கு
ஒத்துவரவில்லை என்றால்
சமயம் பார்த்து
துரோகம் இழைப்பீர்கள்
உங்கள் வேடத்தை
அம்பலப்படுத்தினால்
முடவனாக்கி
மூலையில் உட்கார
வைப்பீர்கள்
திரைமறைவில் இதையெல்லாம்
செய்து கொண்டு
பொது வாழ்வில்
புனிதர் பட்டம்
பெற்றுக் கொள்வீர்கள்.


புதிர்

வாழ்க்கை புதிர் போடுகிறது
விடையளிக்க முடியாமல்
நாட்களை கடத்துகிறார்கள்
மனிதர்கள்
பழுத்த இலை
மரத்துடனான பிணைப்பை
முறித்துக் கொண்டு
கீழே விழுந்தது
பூக்கின்ற பூவில்
எத்தனை கனிகளாகும் என்று
யாருக்கும் தெரியாது
நீர்க்குமிழிகள் உணர்த்தும்
வாழ்வின் நிலையற்ற தன்மையை
மயானத்திற்கு வழிகாட்டும்
பெயர்ப் பலகைகள்
வெளவால்கள் குடியிருக்கும்
மர்ம மாளிகைகள்
நிம்மதியை தொலைத்துவிட்டு
தேடுபவர்களுக்கு
யார் இளைப்பாறுதல்
தருவார்கள்
உடைந்த படகைப் பிடித்துக் கொண்டு
கரையேறியவனுக்குத் தான் தெரியும்
வாழ்வின் அருமை.


அம்புலி

அந்தகாரம் கவிந்த வானத்தில்
நிலா உடைபட்டுக் கிடந்தது
ரதத்தில் வந்து கொண்டிருந்த
சூரிய பகவான்
அச்சாணி கழன்றதை
கண்டுகொள்ளாமல விட்டுவிட்டான்
கால் முளைத்த இரவு
களங்கத்தோடு காட்சி தரும்
சந்திரனைக் கையிலெடுத்து
விளையாடியது
மனிதர்கள் ஓடிக் கொண்டே
இருக்கிறார்கள்
மரணம் நிழலாகப்
பின் தொடர்வதால்
என் வீட்டிற்கு வந்த நிலா
ஊஞ்சலில் ஆடியபடியே உறங்கியது
நிறைந்த பெளர்ணமியில்
நிலாவைக் காணாது மக்கள்
குழப்பமடைவார்கள் என்பதால்
விழுந்தடித்துக்கொண்டு ஓடியது
கரையை சத்தமில்லாமல்
முத்தமிட்டுச் செல்லும் அலைகள்
வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு
வானம் வரை எழும்பும்.


தருணம்

பரிதியைக் காணோம்
வானில் பரிதியைக்
காணோம்
வனத்தில் திசைதெரியாமல்
தொலைந்ததா
கள்வர்கள் கைகளில்
அகப்பட்டுக் கொண்டதா
எரிந்து எரிந்து
சாம்பலாய்ப் போனதா
ராட்சச பாறைகள் மோதி
தூள் தூளாய் ஆனதா
மக்களின் செயல்களைக்
காணப் பிடிக்காமல்
மலைகளின் இடையே
ஒளிந்து கொண்டதா
நிலவிடம் பந்தயம் கட்டித்
தோற்றதா
இருளைக் கிழித்து ஒளியைப்
பரப்பும் வேலையில்
அலுப்பு தட்டிவிட்டதா
இயற்கைக்குப் பயந்து
நடக்க முடியாதென
மானிட இனத்தை
முழுமையாக கைவிட்டு
விட்டதா.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R