1. வீதியின் நீதி

தம்பாஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.

போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.

சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.

நம்பி நிறைந்தன வீதிகள்.

தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.

தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.

எத்தெரு ஆனாலும்
எத்திசை போனாலும்
அவை ஒரு வழிப்பாதையாகிவிடும்
உலக அதிசயம் இங்கு நிகழ்கிறது.

உயிர்ப்போடு போகிறவர்கள்
விறைப்பாக எடுத்து வரப்படுகிறார்கள்.

புறாக்களின் ஒட்டுச் சிறகுகள்
வீதியெங்கும் கொட்டி பரவுகின்றன.

வீதிகளின் விதி என்னவோ?
விதிகளின் வீதி என்னவோ?


2. நிலவுக்கு எம்பிக் குதி.

தம்பாஜனநாயகம் என்பது
நாணயத்தின் இரு முகங்கள் போன்றது.

தலையாக அவன் வென்றால்
காலடியில் பூவாக நீ நசிவதும்

பூவாக நீ மணம் கமழ்ந்தால்
அவன் சேற்றில் தலை மூழ்கிப் போவதும்
சக்கர சுழற்சியின்
வலிகள் மானிடா.

ஆயினும்
ஆண்டான் அடிமை என்பது
காலப்பெட்டகத்துள் அடைக்கபட்டதால்
உனது அடிமை விலங்கு
காலக்கிரகத்தில்
கழட்டப்பட்டே தீரும் தோழா.

சுண்டி வீசி
அக்கம் பக்கம் தவறாது
குத்தென நாணயம்
நின்றுபோன சகுனம்
`தலை´ கொய்யப்பட்டு
`பூ´ கசக்கப்பட்டு
சர்வ அதிகாரங்களும்
முண்டங்களினால் ஆளப்படும்.

பொன்
வெள்ளி
செப்பு
என விதம் விதமான கைவிலங்குகளை
தெரிவு செய்யும்
ஜனநாயக உரிமையை
நினைந்து நினைந்து
பூரித்து அடைகாத்து கரைவாய்,
பாலைவனத்தில் திசை தெரியாதவன்
காணல் நீரைக் கண்ட
நம்பிக்கை போல.

"ஜனநாயகம் என்பது
மக்களால்
மக்களைக் கொண்டு நடைபெறும்
மக்கள் அரசாங்கம் !".
என்று முழங்கு.

சக்கரத்தின் மையம் மட்டும்
எப்போதும் மாறாத புள்ளியில்
தரித்து நிற்கும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R